மங்கல ஓசை எழுந்துவரமங்கையர் கள் நடமாடிவரசங்கு ஒலித்திடும் சத்தமெழசாய்ந்து மரங்கள் சலசலக்கபொங்கும் தமிழிசை காதில்வரபொய்கை இளந் தென்றல் வாசமிடஎங்கும் மணியொலித் தின்பமெழஏழைகள் வாழ்வில் நிறைவுகொள்ளவெங்கனல் வீசிடும் நீதியெழவிட்டெழுந்து தீமை ஓடிவிடதங்க ஒளிநிலா ஊற்றிவிடதந்தன தந்தன தாளமெழசங்க தமிழிசை சந்தமிடசார்ந்து குயிலிசை கானமெழசெங்கனி கொண்டதை தேனழைந்துதின்னவென பெண்கள் தந்திருக்கமங்கிடும் மாலையின் மஞ்சள்வெயில்மாறி இருள் போர்வைமூடிவிடஅங்குமிங்கும் வண்ணம் பூசியதாய்ஆக்கும் வண்ணஒளிக் கோலமிடபொங்கி விரிவன பூச்சரங்கள்போலும் வெடிக்கும் மாத்தாப்புகளும்தங்கிடும் இன்பத்தை வாழ்வுனிலேதந்திடப் புத்தாண்டு வந்ததுவோவெள்ளி முளைத்து விடியுதெனவேண்டுவர் வாழ்வில் உதயமெழபுள்ளியிட்ட மானும் துள்ளுதெனப்பூவையர் சின்னவர் ஆனந்திக்கஅள்ளி யணைத்திடத் தாயவளும்அன்புகொண்டதந்தை கூடிநின்றேஉள்ளமதில் பெருஆனந்தமும்உண்டு செய்யுமோ புத் தாண்டுமிதே!
..............................
No comments:
Post a Comment