Sunday 10 May 2015

இப்போய்

c
      இப்போது இல்லை, பின் எதற்கு?

தேகம் கறுத்துக் கிடந்ததென்ன - அந்தத்
திங்கள் ஒளியை இழந்ததென
ஆகப்பெ ருத்தும் அவ் வாழியுயர் - திரை
யாகி எழுந்தும்பின் வீழ்வதென்ன
போகம் உடம்பினைத் தின்பதென்ன  அது
போதுமெனும்வரை கொண்டதென்ன
தாகம்  எடுதத இம் மேனியிலே பேயும்
தாவிப் பிடித்தாடிக் கண்டதென்ன

காகம் குயில் கறுத் தேயிருந்தும் அந்தக்
காகம் குயிலிசை பாடிடுமா
நாகம் நளினம் கொண்டே யசையும் - அதை
நாமும் ரசித்துற வாடிடவா
வேகமெடுத்த இவ்வாழ் வினிலே - விடை
வேண்டித் திரிந்துள்ளம் காண்பதில்லை
யாகம்முடித்து வான் வீதியிலே எங்கள்
யாத்திரை யின்பின்னர் கண்டுமென்ன

சோகம் மனதினைக் கவ்வுவதும் அது
சேர்ந்து வரும் வாழ்க்கைப் பாதையெங்கும்
பாகமெனப் பங்கு கொண்டபழி - செயல்
பண்ணும் மனதினை வென்றுவிடும்
ஏகம் அனேகமென்றான ஒளி- அந்த
ஏற்ற மிழந்துபின் வாடுகையில்
பூகம்பமாய் உ:ள்ளும் மேலிருந்தும் எங்கள்
பேணி வளர்த்தமெய் தீய்த்துவிடும்

மேகம் பொழிந்திட நீர் வழியும்  இந்த
மேனிமலர் சுகபோதை யெழும் பி0ர
வாகம் என புரண்டே மகிழும் - -முடி
வாக உணர்வுகள் தானடங்கும்
ஆகும் தனிமைகொண் டாணவமும் அது\
ஆட்டிவதைதிட்ட  மேனிதனும்
தீ‘கும்’மென்றோடித் எரித்தபின்னர் மனம்
தேடும் அமைதி கிடைத்துமென்ன !!

No comments:

Post a Comment