Sunday 31 May 2015

அடடாவோ அடடா

தேன் கனிக்குள் நாவினிக்கும். தித்திப்பிட்ட தாரோ 
தெங்கிள இன் நீரருந்தத் தீஞ்சுவை இட்டாரோ
வானமதை நீலமென்றும் வையகத்தைப் பச்சை
வண்ணமுடன் தீயெரியும் விண்ணமைத்த தாரோ
ஊன் படைத்து ஓசைகொண்ட உள்ளிதயப்பேழை
ஓடித் தினம் சூடுஏற்றும் உள் உதிரக் கூட்டை
மேன் எழுந்த வான சக்தி விந்தையுறச் செய்தே
மேதினியில் ஆக்கும்வாழ்க்கை அடடாவோ அடடா

மீன்தெறித்து நீர் விடுத்து மேகம்காணத் துள்ளும்
மேலெந்தழுந்த வேகத்ததிலே மீண்டும்நீருள் ஆழும்
வான்பறந்த புள்ளினங்கள் வந்து மாலைசேரும்
வாழ்வதற்கு வானமல்ல பூமியென்று கூறும்
தானுயர்ந்த நேரமென்று சுற்றியாடும் பட்டம்
தன்னிலையில் வாலறுந்து தாவிச்சுற்றி வீழும்
ஏன் மனிதம்மட்டும் இன்னும் ஏழை மண்ணில் காண
ஏய்த்தும் உண்ணும் எத்தருக்கோ என்றும் வானம் சொந்தம்

தேன்சுரக்கும் பூவைத்தொடத் தென்றல் வந்துசேரும்
திங்கள் வானில் பொன்னிறத்துத் தேசு கொண்டு வீசும்
மீன் விழிகள் கெஞ்சல் கண்டு மோகம் தேகம் கொள்ளும்
மின்னல் மழை நீர்பொழிந்து தண்மை ,கொண்டு மாறும்
மான்பிரித்த மாயம்போலும் மங்கும் மாலைவாழ்வில்
மையல் கொண்டுழன்ற தேகம் மஞ்சம் காடு காணும்
தானறிந்த இன்பம்கண்டு தூரமென்ற உண்மை
தன்னிலை மறந்த விந்தை அடடாவோ அடடா

மேனெடுக்கும் வாழ்விலேது மாற்றத்தோ டேமாற்றம்,
மிஞ்சும் இன்ப மேதுமில்லை மேகத்தூறல் போலும்
கானகத்தின் காயும்நிலா கண்டதென் ஒன்றாகும்
கல்லறை செந்தீயழிக்கும் காத்ல்மேனி யாவும்
தேனகத்தில் கொண்டுமென்ன சிந்தை நேர்மைமாறின்
சென்றபாதை யெங்கும் மண்ணில் தீயெழுந்து வேகும்
ஆனதென் எடுத்துவேகம் அல்லல் போக்க அன்பாம்
ஆயுதந் தனைக் கொள்ளின்பம் அடடாவோ அடடா

சாணுயர்வில் முழஞ்சறுக்கும் செய் வினைகள்கூடி
சடசடவென் றிடிமுழங்கும் சுற்றிமுகில் ஓடி
தானுயர்ந்த நீர்வழிந்து வெள்ளமென்று ஓடி
தண்திரை கொள்சாகரத்தின் தன்மை வேறென்றாகி
பேணுகின்ற மாந்தர் கூட்டம் பிரித்தழிக்குமாடி
பேரழிவைக் கொள்ளும் இனம் ஏழைகளென்றாகி
காணுகின்றபோது தெய்வம் கொண்டதென்னநீதி
காலமென்னும் காரணம் கணக்கில் கொள்வதோடி?

கங்கைபோலும் பொங்கும் நீரும் கன்னங்களில் ஓடி
கன்னி வாழ்விர் கண்டதென்ன காமுகர் கையோடிப்
பொங்கிடும்,தமிழ்க் குலத்துப் பூவையர்க்ள் மேனி
பூவெனும் தன் மைவிடுத்துப் போவதெங்கு மாறி
அங்கவன் அழிக்க இன்னும் அஞ்சலென்ன கூடி
அன்னையின் நிலம் மறக்க ஆகும் துன்பம்கோடி..
செங்குலம் சினத்தல்கண்டு சொல்லவேண்டும் பூமி
’ செந்தமிழ் மெய்வீரம் கண்டோம் அடடாவோ அட்டா’

No comments:

Post a Comment