Friday 8 May 2015

துஞ்சும் நெஞ்சம்



அன்புடை நெஞ்சங்கள் ஆவி துடித்திட
  ஆக்குவன்  பேரென்னவோ  - பகை
வன்புய லாய்வந்தே உள்ள உயிர் கொல்லும்
     வாடிக்கை தான் திறையோ
தென்புலம் வந்துபொன் தேடிக் கொள்ளை யிட்டுத்
   தேவைகள் தீர்த்திடவோ  - அவர்
தென்புறத் தேனடை தீந் தமிழ் காவியத்
     தென்றலாகித் தொடவோ

எண்புலி என்னிலென் ஏகாந்த சூழலில்
  எண்ணக் கிடைப்பதென்ன  - அவர்
கண்புகை பட்டு கலங்கலின்றி உடல்
  காணும் வதைக்கென்னவோ
பண்புள்ளம் கொண்டு பழகும் தமிழ்மகன்
  பார்வைகே மாளி யென்றோ - காணும்
புண்படும் உள்ளத்தில் கொண்ட புயல்தன்னும்
  பூமியில் பொங்கிடுமோ

செண்பகம் ஒன்று சிறுமரத்தில் நின்று
  சேதியும் கூறியதே - இந்த
மண்பகை வன்கொள்ள மாடுகளாய் உழும்
   மானிடம் ஆகுமென்றே
தண்புனல் தன்னும் தருணமென்றால் ஊருட்
  தாவிப் பலி எடுக்கும் - பகை
பெண்புதுமைத் தமிழ் பேரழகு சிதைத்
   தின்புற ஏன்கிடந்தோம்

கட்டி விறகிட்டு தீயெரித்தால் உடல்
  கையளவே கிடைக்கும் - அதை
வெட்டி உதிரத்தை வேருக் கிறைத்திட
  வீரப் பயிர் முளைக்கும்
தட்டிப் பறித்தவர் தம்மைவிட்டு மண்ணை
    எட்டிப் பிடித் திழுக்கும் - செயல்
திட்ட முடன் தெளிவோங்கிடச் செய்திடத்
   தேவை தலைமையொன்றும்

வட்டமுரசறைந் துற்ற வெற்றிதனை
    எப்போவிண் ணும் ஒலிக்கும் - நின்று
கொட்டும், தாளமெழக் கட்டழகுப் பெண்கள்
   சுற்றிக் கோல் கொண்டடித்தும்
சட்ட மெழுதித்தன் எல்லையிலே கொடி
   சட்சட் பட்டென் றடிக்கும் -  நிலை
கொட்ட மடித்தின்பக்  கும்மாளம் போட்டிடும்
    கோலங்கள் காண்பதெப்போ

No comments:

Post a Comment