தந்தவளும் தந்தவளம் தந்தவிழும் தீங்கவிதை
சந்தமெழா நின்றுவிடலாமோ
வந்துலவும் தென்றலெனும் சிந்துகவி நின்றுவிடக்
குந்தகமும் கொண்டுவிழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
இந்தமொழி எந்தனுயிர் என்றுயரம் நின்றபடி
வந்தவழி சென்று விடலாமோ
சந்தமெழா நின்றுவிடலாமோ
வந்துலவும் தென்றலெனும் சிந்துகவி நின்றுவிடக்
குந்தகமும் கொண்டுவிழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
இந்தமொழி எந்தனுயிர் என்றுயரம் நின்றபடி
வந்தவழி சென்று விடலாமோ
சிந்தனையில் இன்பமிடும் நந்தவனத் தென்றல் தனும்
வந்துடலை மென்வருடும் இன்றோ
மந்தமெனக் கொண்டுகவி சுந்தரமுமின்றி அவை
முந்தும்விளை வின்றி விழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
உந்தும் அலை தன்னில் அது தந்தனதோம் என்றுநடம்
விந்தை கொளல் என்று முடிவுண்டோ
வந்துடலை மென்வருடும் இன்றோ
மந்தமெனக் கொண்டுகவி சுந்தரமுமின்றி அவை
முந்தும்விளை வின்றி விழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
உந்தும் அலை தன்னில் அது தந்தனதோம் என்றுநடம்
விந்தை கொளல் என்று முடிவுண்டோ
பொன்னெனவும் மின்னுமொளி அந்தியில் மறைந்தசுடர்
பின்னரொளி கொண்டுதயம் காணும்
சின்ன ஒளிச் சந்திரனோ தன்னில் நலிந்தென்ன பயம்
முன்னையெனப் பொன்னுடலும் விம்மும்
அன்னவகை புன்னகையை என்னிதழில் தந்தவளும்
சொன்ன விதியென்ன வகையாமோ
என்னதடை செய்திடினும் ஏங்கும்மனம் தண்மைத்ரும்
தென்பொதிகை தென்றலென் றாகாதோ
பின்னரொளி கொண்டுதயம் காணும்
சின்ன ஒளிச் சந்திரனோ தன்னில் நலிந்தென்ன பயம்
முன்னையெனப் பொன்னுடலும் விம்மும்
அன்னவகை புன்னகையை என்னிதழில் தந்தவளும்
சொன்ன விதியென்ன வகையாமோ
என்னதடை செய்திடினும் ஏங்கும்மனம் தண்மைத்ரும்
தென்பொதிகை தென்றலென் றாகாதோ
எண்ணமலர் கண்மலரப் பண்ணுமிளங் கற்பனைகள்
மண்ணிலழ கின்கவிதை தாரும்
விண்ணிலசை வண்ணமெழும் வேகவிசை காந்த அனல்
திண்மைவலி சக்தியென் தீதானும்
பெண்ணெனுமோர் அன்னைதனைப் பெற்றவளைத் தந்தவளைக்
கண்ணெனவே போற்றும் உளம்கொண்டேன்
மண்ணிலெனைக் கண்டிளகும் உள்ளமதைக் கொண்டவளே
மென்கவிபொ லிந்தெழச் செய்வாயோ
மண்ணிலழ கின்கவிதை தாரும்
விண்ணிலசை வண்ணமெழும் வேகவிசை காந்த அனல்
திண்மைவலி சக்தியென் தீதானும்
பெண்ணெனுமோர் அன்னைதனைப் பெற்றவளைத் தந்தவளைக்
கண்ணெனவே போற்றும் உளம்கொண்டேன்
மண்ணிலெனைக் கண்டிளகும் உள்ளமதைக் கொண்டவளே
மென்கவிபொ லிந்தெழச் செய்வாயோ
கற்கைநெறி விற்றலுண்டோ விட்டகலா,, பொற்குவையாம்
தற்பெருமைகொள்ள வைத்தபோதும்
சற்குருவென் றிற்றைவரை உற்றகவி செய்மனதை
சற்றும்விடா தட்டி யெழச் செய்தோர்
நற் குணத்தை நானறியா நாவிலெழும் வார்த்தைகளை
இற்றைவரை கொண்டதமிழ் ஏடும்
சுற்றி இழை கொண்டுருட்டி கட்டிஅயல் வைத்துவிடக்
காணுவனோ கண்விழிப்பனாமோ
தற்பெருமைகொள்ள வைத்தபோதும்
சற்குருவென் றிற்றைவரை உற்றகவி செய்மனதை
சற்றும்விடா தட்டி யெழச் செய்தோர்
நற் குணத்தை நானறியா நாவிலெழும் வார்த்தைகளை
இற்றைவரை கொண்டதமிழ் ஏடும்
சுற்றி இழை கொண்டுருட்டி கட்டிஅயல் வைத்துவிடக்
காணுவனோ கண்விழிப்பனாமோ
No comments:
Post a Comment