Saturday 23 May 2015

பொங்கல்



பொங்கட்டும் செங்குருதி புல்லர்களின் செயல்கண்டே
பொங்கட்டும் வெஞ்சினமும் பேடியரின் போக்கெண்ணிப் 
பொங்கட்டும் மக்கள் நலம் புதுவெண்ணம் புதியவழி 
பொங்கட்டும் புத்துணர்ச்சி போகட்டும் சோம்பல்தனும்
மங்கட்டும் மாயமெனும் மதிபிறளும் வெறியுணர்வு 
தொங்கட்டும் தோரணங்கள் தூய தமிழ்வீதியிலே
எங்கெட்டும் வாறிந்த இன்தமிழின் சுதந்திரத்தை
நன்கொட்டும் முரசினொலி நாலுதிசை காவாதோ

பெண்கட்டும் பூம்பொதியில் பிறந்துவளர்ந்.தோ முயிரை
மண்கொட்டும் உடலிட்டு மாமனிதஉருப்பெற்றோம்
வெண்பட்டும் போலழுக்கில் வீழாது மெய் காத்தோம்
புண்பட்டும் போகவென புல்லர்களின் செயலாலே                                                      ]
எண் கெட்டுப்போ எனவே ஏராளாமாய் இழந்தோம்
தண்குட்டை நீரினிலே தவிக்கின்ற மீனினமாய்
கண்கெட்ட வகையாகி கடுமிருட்டில்நடக்கின்றோம் 
விண்ணெட்டும் வகை இன்பம் விளைவதெப்போ விடைகூறு

இங்கெட்டும் வரை எங்கள் இன்பம் தழைத்திடவும்
திங்கட்கும் இல்லாத தேமதுரசுவை கொண்டு
திங்கட்கும் ஒளியீந்த செம்மலவன் ஒளிதாங்கி 
திங்கட்கும் பின்நாளில் தேனிசைக்கும் தமிழ்பாடி
திங்கட்குள் முன்னோனின் திருநாட் தினமொன்று
எங்கட்கும் வாராதோ இல்லாத மண்மீட்டு
தொங்கட்டும் தூயதமிழ் சுதந்திரக் கொடிபறக்க
சங்கிட்டும் முரசொலிக்க சேதிவான் எழுமாமோ

வெற்றியென் றொலிக்கட்டும் வீரத்தில் புதுப்பானை
பெற்றவராய் விடுதலையும் பெற்றின்பத் தீமூட்டி
முற்றிலுமெம் சுற்றமுடன் மற்றவரும் ஒன்றாகிக்
கற்றவரும் கன்னித்தமிழ் கல்லாக் குடிமகனும்
குற்றமற்ற தாயிருக்கக் கொடுமைசெய் பழிநீங்கி
விற்றுப் பகையுணர்வை வீறுடனே தமிழ்காத்த
அற்புதமென்றோர் காலம் ஆகாதோ அந்நாளில்
நற்றமிழின் சுவைபொங்க நாமுண்ண மாட்டோமா?
***********************************************

திங்கட்கும் -- தின் கள்ளுக்கும் (தேனுக்கும்)

திங்கட்கும்  --- சந்திரனுக்கும்

திங்கட்கும்  -- திங்கட் கிழமை--

திங்கட்குள்  -- மாதங்களுக்குள்

No comments:

Post a Comment