Thursday 4 June 2015

இன்பம் -1

இன்பம் 1
இசை மேவிவருங் களி கூரும்வகை
இளங் காற்றிலெழும் ஒருகீதமே
விசை கூடும் மனந்தன்னில் காலையெனும்
பொழுதோடிவருங் கதிர் ஏறவே
திசைநாலுமிருந் துணர்வோடு கிளர்ந்
துயிர்மீது படர்ந்துடல் ஆடவே
அசைந்தோடிவரும் நதியோட எழும் பிர
வாகமெனச் சுகம் காணுமே
தேடிவருங் கருவண்டதனை மது
வுண்ணவென மலர் தாங்குமே
ஆடி நிலத்திடை வீழ்தருவின்கனி
ஆனந்தமாய் கிளி உண்ணுமே
நாடி வரும் உயிர் வாழவென இந்த
நானிலமும் இடம் தந்ததே
ஒடிவிடுமுயிர் வாழும்வரை நாம்
இல்லாற் கீதல் இன்பமே
மலை மீதுறையும் கதிர் சோலை யெங்குமொரு
மஞ்சள் வெயில் பிர காசமே
அலை கூந்தலுடை யிளங் கன்னியரோ பூம்
பந்தெறிந்தே விளையாடவே
நிலை ஓடும் சிறார்களும் கூடி மகிழ்ந்தவர்
நின்ற இடம்விட் டோடவே
கலை மேனியர்கள் அவர் காவலர்கள் அன்னை
கைபிடித்தேகிடும் காட்சியே
செழித்தோங்கும் இளம் பசும் வண்ணமெழச்
செறி பாரிடை வாழ்ந்திடும் போதிலே
பழி தோன்றிடப் பொங்கிடும் நீளத்திரைகடல்
பாய்ந்து மறைந்திடும் சூரியன்
விழி பார்த்துக் கிடந்திட்ட பொன்நிலவோ உடன்
வந்து முகம் எட்டிப் பார்ப்பதும்
களிகூடும் மனங்களில் காட்சிகளாய். விழி
காணு மிப்பூமியும் இன்பமே
**********

No comments:

Post a Comment