Sunday 5 July 2015

ஓவியப்போட்டி (கவிதை) 3



விடைதெரியுமா? தெரிந்தால்கூறுங்கள் 3
****************

மற்றவனின் ஓவியத்தைக் கண்டான் மன்னன்
மரகதமாம் பச்சையெனும் புல்லின்மேடை 
சற்றயலில் நிரைகொண்ட மரங்கள்காணும்
சாற்றினவை சேனை படை யணிபோல்நேரே
நிற்பதுவும் பின் நீல நிர்மலவானம்
நெடுந் தூரம் ஒடிவரும் வெண்முகில் ஒன்றாய்
அற்புதத்தைக் குழைதங்கே தீட்டியும் வைத்தார்
ஆகாகா மெய்மறந்தேன் அழகிலென்றான்

துள்ளிவரும் இசை பாடும்குருவி அன்றோ
தெள்ளமுதக் கீதமதை சொல்லா மௌனம்
அள்ளமுகம் பார்க்கும் மொரு கண்ணடியோ
அதிர்ந்து பலதூண்டாகும் முகத்தின் விம்பம்
வெள்ளை யலைமிதக்கும் அம்மென்னீரோடை
விளையாடும் மான்கள் தன் மிரளும்பார்வை
கள்ளமிலா மீன்கள் சுனை துள்ளும் காட்சி
காணும் அலைநெளிந்தோடக் காணும் சலனம்

எள்ளளவும் ஐயமிலா இயற்கைக் காட்சி
எழுதி வைத்த விதம்கண்டே ஏக்கம்கொண்டான்
கொள்ளைஎழில் கொண்ட பசும்புல்மேடையில்
கொண்டு வளர் புல்விரும்பிக் குதித்தே வந்தோர்
துள்ளியந்த ஓவியத்துள் செல்லக்கேட்கும்
துணிவெடுத்த கன்றொன்றின் துடிப்பைக்காக்கும்
தள்ளியதை நிறுத்தவெனப் பாடுபட்டே
த்டுமாறும் ஒருகூட்டம் தனையும்கண்டான்

இல்லையிதில் குறைவென்ப தியற்கை ஆற்றல்
எழுதிவைத்த இரண்டதிலும் எல்லாம்சமமே
வல்லமையில் போட்டியிடுமிரண்டைகண்டோம்
வைத்திருக்கும் மூன்றாமவன் வரைந்தோர் அழகை
சொல்லிமனம் வேண்ட அவன் நடையும் கொண்டான்
தூரிகையின் வண்ணத்தை தீட்டிச்செய்தும்
எல்லோர் கண்பார்வைக்கும் ஏற்றோர் வண்ணம்]
இட்டதனை மறைத்தமுன் திரையைக்கண்டான்

முன்னிலையிற் சென்றவன்கோ மூன்றாவதை
மூடிவைத்த ஓவியத்தை காணவந்தேன்
உன்கலையைக் காணுமிச்சை கொண்டேன் 

திரையை ஒதுக்கிவிடும் என்றவனை திகைத்தே நின்றே
தன்னிலையில் மிரளுமவன் முகத்தை நோக்கி
தான்வியந்தும் கலக்க்முற்ற தன்மை நோக்கி
என்ன சொல்வ தறியாது இருப்போன் விட்டே்
இதை விலக்க ஏன் தயக்கம் என்றே கையால்

தள்ளித்திரை விலக்கிவிடக் கையும்கொண்டே
தயங்காது முயற்சித்தவேளை யாங்கே
உள்ளதொரு திரை உண்மை அன்றேயென்றும்
உணர்ந்தவனோ திடுமென்று பின்வாங்கினான்
குள்ளமனம் கொண்டாங்கே திரையைப்போலும்
குழைத்தழகாய் தீட்டியதோர் ஓவியத்தைக்
எள்ளி நகையாடும்படி இழைத்தவமானம்
இவன் வரைந்த ஒவியத்தால் இருக்ககண்டும்

யாரங்கே என்றலறப் பணியாள் தானும்
ஆற்றும்செயல் ஏதுமன்னாஆணையிட்டால்
கூரங்கே கொண்டவளை கொடும் வாள்கொண்டே
குதூகலிப்பில் குரரல்வளையைத் துண்டாக்கவா
பேரங்கே உச்சரிக்க பின்னால் நின்றே
பிறிதென்றே முண்டம் சிரசெடுப்பேன் இன்னும்
வேரெங்கே வெட்டிக்குலம் வீணாக்க வா
விளையாடிப் பந்தடிக்கத் தலை சீவவா

என்றவனை உள்நோக்கி சினந்தான் மன்னன்
இதுதவிர வேறொன்றும் அறியா உள்ளம்
மன்னனுக்கே கேடு என்றவனைக் வைது
முடிச்செங்கே எடுத்துவா மூடா என்றான்
பொன்னிறைந்த கிழியினையே பரிசாய் கொள்ளும்
பொதுவில் நிறை தந்ததிந்தப் பெரிதாம் ஓவியம்
முன்னிருக்கும் திரைமறைவைப் போலே தீட்டி
மெருகடைந்த உன்கலையின் திறமை கண்டேன்

வந்துபெறு உன்பரிசை என்றேயந்த
வாடிநிற்கும் ஓவியரில் மூன்றாம் ஆளை
சிந்துமெழிற் புன்னகையை உதட்டில் கொண்டே
சிறப்படைந்த ஓவியத்தை விரும்பிக்கண்டேன்
வந்துகொள்வாய் என்றவனை மீண்டும் கேட்டான்
வகையறியா நின்றவர்கள் சலனமிட்டே
இந்த முடிவேனோ வண்டார்க்கும் மலரும்
இட்டமுடன் புல்வேண்டி இருந்த கன்றும்

ஓடிவந்தே வியப்பினையே ஈயக்கண்டோம்
இதுவென்ன திரைமூடித் தோன்றும் வண்ணம்
நாடி வரும் மன்னனையே நகைப்பில் ஆக்கி
நல்ல உளம்புண்ணாகச் செய்தோன் தன்னை
மூடிவைத்த திரைக்காட்சி பரிசைப் பெற்றால்
முடிவென்ன நீதியிங்கே பிழைத்த தென்றே
கூடியிந்த செயலுக்குக் காரணமேது
கொற்றவனைக் கேட்போம் என்றுள்ளம் கொண்டார்

(மன்னன் என்ன பதில்சொல்லியிருப்பான்
விடை உங்கள் ஊகம் சரியானதே கூறுங்கள்)

(முடிந்தது)



மற்றைய இரண்டு ஓவியங்களும் ஐந்துஅறிவுக்கும்  குறைந்தவைகளையே ஏமாற்றின . ஆனால் அரசனையெ  தடுமாறவ் வைத்த சித்திரம் தத்ரூபமாக இருந்ததால் அவனுக்கே பரிசு

No comments:

Post a Comment