Sunday 5 July 2015

ஏன் மனதே தொலைந்தாய்


மாமரத்தில் துங்கும்கனி மஞ்சள் வெயில் மாலையிருள்
மல்லிகையைத் தொட்ட தென்றல் மாறிவிடாதோ
கா மலர்ந்த பூவைவிட்டுக் காற்றினித்த கனியணைந்து
காணும் மணம்காட்டிடையே காவிவராதோ
தேமதுரக் கூட்டில்நிறை தேன் வழிந்தே ஊற்றுதெனத்
திங்கள் ஒளி காட்டுங் கவி தேனழையாதோ
பூமதுவைத் தேடு தும்பி புன்னகைக்கும் பூவைவிட்டு
போம்பழத்தி னூடுதுளை போடுதலேனோ

நானழுதும் நடைபழக நாடு ஒருதேசமில்லை
நாலனிலமே காடுஎனில் நலிந்திடும் தூக்கம்
கூனெழுமோர் விழி புருவங் கொண்டு கணை எய்பவளை
கொல்ல வருஞ்சேதி கண்டு கூடுது ஏக்கம்
கோனெழுந்து நடைபயிலக் கோடிஉயிர் போகுமெனில்
கொள்ளுவதென் நீதிதனும் கொண்டதோ தூக்கம்
வானெழுந்த மேகமென வாழ்வில்பெருஞ் சுதந்திரத்தை
வந்துவிதி மாற்றும்வரை வார்த்தையில் தேக்கம்

பாவெழுதிப் பாடும்வரி பாரில் ஒருமாற்றமில்லை
பாவம் வளர்ந் தோங்க மனம் பட்டது தாக்கம்
தீவிழியில் தோன்றும் வகை தினகரனினொளி குறைந்து
தேகமதை தீய்க்கும் சுடர் தெரியுது ஏற்றம்
ஓவெளியில் கால்நடந்து உற்றவழி காணும்வரை
உள்ளமதில் தேன்கனிந்து ஊற்றிடும் வாழ்வும்
மாவிலங்கு தானொடிந்து மங்கைமனம் தான்குளிர்ந்து
மானமுடன் வாழும்வரை மறைநிலா மேகம்

No comments:

Post a Comment