Sunday 5 July 2015

சந்த வசந்தம் தேடி.......!


குவைபொலியக் கவிமலியக் குவலயமும் நிறைபுகழ
அவைமகிழக் கலைபொலிய அனுதினமும் கரமெழுதச்
சுவைஎழவும் சுவையிலினி சுகமெழவும் சுழல் புவியில்
இவை உளதா அதிசயமென் றிருவிழிகொள் இமைவிரிய

நிலம்மகிழக் கலைபெருக நிறைகவிகள் பலவரவும்
பலதிசையும் படரும்வளி படுமினிமை பயன்மொழியத்’
தலையிலொரு மகிடமெழத் தரணியதை வழிமொழியக்
குலையுமலர் மெதுமையெனக் காண்சந்த வசந்தமதோ

கவிவரியில் இழைசந்தம் கவினுறவே நிறையுதெனப்
புவி ககனம் புகழ்பரவப் புதியதொரு சுகம் எழவும்
தவி்த்த நிலை தனைவிடவும் தாகமுடன் சந்தநடை
குவிக்குமிசை கொள்ளெனவே குரல் அரியமொழி அறிய

இனம் அழகாய் இயல்புரியும் எழில்மயிலும் குயிலொன்று
கன மழையின் துளிகாண கானமுடன் நாட்டியமும்
புனல்சரியும் அருவியிசை புதுநடைகொள் சந்தமதில்
தினம் பயில்தல் தேரவெனத் திசையறிந்து வந்தனவாம்

No comments:

Post a Comment