Friday 25 September 2015

வாழப் பழகுவோம்

                                      'வாழப் பழகுவோம்

அறிவோடு விளையாடி வெல்லும் வாழ்க்கை 
.  அறமென்ற நிலை கொள்ள வேண்டும்
குறியோடு நம் வாழ்க்கை கொண்டே - நல்ல
.  குணவானாம் இவனென்றே எவர்கூற வேண்டும்
வறியோரை யாம் காக்க வேண்டும் - இன்னும் 
.  வசதியென் றுள்ளோர்கள் தனமீய வேண்டும்
பிறிதென்ற மனமின்றி என்றும் - வாழ்வில்
.  பிறர்மீது அன்போடு மொழிகூற வேண்டும்

களிகொண்டு முகங் காணவேண்டும் - எதைக் 
.  கருதாது துயரின்பம் சமமாக வேண்டும்
வெளிவானின் பிரகாசம் வந்தே - உந்தன் 
.  விழிமீது ஒளியூட்டும் விதம்வாழ வேண்டும்
எளியோரின் சொல் கேட்க வேண்டும் - அன்பை 
.  இறைஞ்சும் நல்வாழ்வுக்கு இறைவேண்டு நாளும்
புளியோடும் அதனோடு போலே - உந்தன் 
.  புறவாழ்வு இருந்தாலும் மனமொன்ற வேண்டும்

அழகான மனை எண்ணவேண்டும் - என்றும் 
.  அவளோடு மனம்விட்டு எது தானும் பேசும்
வழமைகொண் டறிவோடு சிந்தை - தன்னில்
.  வருங்கால நிலையெண்ணி வளம் கொள்ள வேண்டும்
உழவென்று வயலோடி நின்றே - கதிர் 
. எழுந்தாடும் நிலைகாண மகிழ்வானே அவனை
விழுகின்ற நதிபோலவன்றி  அந்த 
.  வெளிவானைத் தொடுகின்ற மலையாக்க வேண்டும்

அளவான குழந்தைகள் எங்கள் - அன்பின்
.  அறம்கொள் இல் லறவாழ்வை இலகாக்கும் எண்ணி
களவோடு பொய்ப் பேச்சுமின்றிக் - கேடு 
.  கயமைகொள் இருள் நீங்கிக் காணுள்ளம் வேண்டும்
தளம்பாத உயரெண்ணம், தாங்கி - நிதம் 
.  தனை நம்பும் மனைகூடி ஒருபாதை கண்டே
இளமை என்றின்பத்தில் வாழ்வை - என்றும்
  .எழுகின்ற கதிர்காக்கும் ஒளிதன்னை வேண்டு!'



அறிவோடு விளையாடி வெல்லும் - வாழ்வில்
. அறமென்ற நிலை கொள்ள வேண்டும்
குறியோடு நம் வாழ்க்கை கொண்டே - நல்ல
. குணவானாம் இவனென்றே எவர்கூற வேண்டும்
வறியோரை யாம் காக்க வேண்டும் - இன்னும்
. வசதியென் றுள்ளோர்கள் தனமீய வேண்டும்
பிறிதென்ற மனமின்றி என்றும் - வாழ்வில்
. பிறர்மீது அன்போடு மொழிகூற வேண்டும்

களிகொண்டு முகங் காணவேண்டும் - எதைக்
. கருதாது துயரின்பம் சமமாக வேண்டும்
வெளிவானின் பிரகாசம் வந்தே - உந்தன்
. விழிமீது ஒளியூட்டும் விதம்வாழ வேண்டும்
எளியோரின் சொல் கேட்க வேண்டும் - அன்பை
. இறைஞ்சும் நல்வாழ்வுக்கு இறைவேண்டு நாளும்
புளியோடும் அதனோடு போலே - உந்தன்
. புறவாழ்வு இருந்தாலும் மனமொன்ற வேண்டும்

அழகான மனை எண்ணவேண்டும் - என்றும்
. அவளோடு மனம்விட்டு எது தானும் பேசும்
வழமைகொண் டறிவோடு சிந்தை - தன்னில்
. வருங்கால நிலையெண்ணி வளம் கொள்ள வேண்டும்
உழவென்று வயலோடி நின்றே - கதிர்
. எழுந்தாடும் நிலைகாண மகிழ்வானே அவனை
விழுகின்ற நதிபோலவன்றி அந்த
. வெளிவானைத் தொடுகின்ற மலையாக்க வேண்டும்

அளவான குழந்தைகள் எங்கள் - அன்பின்
. அறம்கொள் இல் லறவாழ்வை இலகாக்கும் எண்ணி
களவோடு பொய்ப் பேச்சுமின்றிக் - கேடு
. கயமைகொள் இருள் நீங்கிக் காணுள்ளம் வேண்டும்
தளம்பாத உயரெண்ணம், தாங்கி - நிதம்
. தனை நம்பும் மனைகூடி ஒருபாதை கண்டே
இளமை என்றின்பத்தில் வாழ்வை - காண
.எழுகின்ற கதிர்காக்கும் ஒளிதன்னை வேண்டு!

No comments:

Post a Comment