Friday 25 September 2015

'வந்த பாதையில் கற்ற பாடங்கள் .

(சந்தவசந்தக் கவியரங்குக்காக எழுதியது)
.
.
பாடுங் குயிலும் பேசும்கிளியும்
.  பாடம் கற்றதில்லை
ஆடும் மயிலும் நடனம் எங்கும்
.  அறிந்தே உற்றதில்லை
கூடும் அலைகள் விரிந்தே ஓடும்
.  கொண்டோர் செல்வரிசை
ஏடும் தூக்கும் இயல்பாய் குருவின்
. இடத்தில் கற்றதில்லை

சூடும் பூவை தென்றல்தொட்டே
.  சிறக்கும் கற்றதில்லை
ஒடும் காற்றின் உரசும் நளினம்
.  உலகிற் படித்ததில்லை
மாடும் கன்றை அம்மாஎன்கும்
.  மனதில் பண்புதனை
தேடும் கல்விஎன்றே கற்றுத்
.  தேர்வும் எழுதவில்லை

பாடும் பட்டலை மாந்தர் அறிவெழப்
.  பள்ளி சென்றிடினும்                  
நாடும் குருவுடை  நல்லோர் சிந்தனை
.  நலனைத் தந்திடினும்
காடும் மலையும் கொண்டோர் பூமி
.  கொள்கையில் வாழுபவர்
ஊடும் இதனில் உள்ளோர் அனுபவம்
.  உண்மைப் பாடங்களாம்

நாடும் மனமும் நலிந்ததே போம்பின்
.  நாமதில் கற்கின்றோம்
கூடுமுறவுகள் கொள்கை பிரித்தார்
.  குற்றம் கற்கின்றோம்
சாடும் பொழுதினில் பொய்களில் ஊறிச்
. சற்றே மதி கொண்டோம்
வாடும் மனதில் சுதந்திரம் அற்றோர்
.  வறுமை கற்கின்றோம்

ஒற்றுமையின்றி ஒரினமேன்மை
.  எழுவதில்லை படித்தோம்
கற்றவர் கூடி கனவுகள் கண்டோம்
.  காரியம் செயல் மறந்தோம்
சொற்களைப் பூட்டி சுயநலம் கொண்டோம்
.  சுற்றிடு முலகினிலே
வெற்றென வாழ்ந்தோம் விடுதலை விட்டே
.  செத்திடக் கற்கின்றோம்'

********************

No comments:

Post a Comment