(சந்தவசந்தக் கவியரங்குக்காக எழுதியது)
.
.
பாடுங் குயிலும் பேசும்கிளியும்
. பாடம் கற்றதில்லை
ஆடும் மயிலும் நடனம் எங்கும்
. அறிந்தே உற்றதில்லை
கூடும் அலைகள் விரிந்தே ஓடும்
. கொண்டோர் செல்வரிசை
ஏடும் தூக்கும் இயல்பாய் குருவின்
. இடத்தில் கற்றதில்லை
சூடும் பூவை தென்றல்தொட்டே
. சிறக்கும் கற்றதில்லை
ஒடும் காற்றின் உரசும் நளினம்
. உலகிற் படித்ததில்லை
மாடும் கன்றை அம்மாஎன்கும்
. மனதில் பண்புதனை
தேடும் கல்விஎன்றே கற்றுத்
. தேர்வும் எழுதவில்லை
பாடும் பட்டலை மாந்தர் அறிவெழப்
. பள்ளி சென்றிடினும்
நாடும் குருவுடை நல்லோர் சிந்தனை
. நலனைத் தந்திடினும்
காடும் மலையும் கொண்டோர் பூமி
. கொள்கையில் வாழுபவர்
ஊடும் இதனில் உள்ளோர் அனுபவம்
. உண்மைப் பாடங்களாம்
நாடும் மனமும் நலிந்ததே போம்பின்
. நாமதில் கற்கின்றோம்
கூடுமுறவுகள் கொள்கை பிரித்தார்
. குற்றம் கற்கின்றோம்
சாடும் பொழுதினில் பொய்களில் ஊறிச்
. சற்றே மதி கொண்டோம்
வாடும் மனதில் சுதந்திரம் அற்றோர்
. வறுமை கற்கின்றோம்
ஒற்றுமையின்றி ஒரினமேன்மை
. எழுவதில்லை படித்தோம்
கற்றவர் கூடி கனவுகள் கண்டோம்
. காரியம் செயல் மறந்தோம்
சொற்களைப் பூட்டி சுயநலம் கொண்டோம்
. சுற்றிடு முலகினிலே
வெற்றென வாழ்ந்தோம் விடுதலை விட்டே
. செத்திடக் கற்கின்றோம்'
********************
.
.
பாடுங் குயிலும் பேசும்கிளியும்
. பாடம் கற்றதில்லை
ஆடும் மயிலும் நடனம் எங்கும்
. அறிந்தே உற்றதில்லை
கூடும் அலைகள் விரிந்தே ஓடும்
. கொண்டோர் செல்வரிசை
ஏடும் தூக்கும் இயல்பாய் குருவின்
. இடத்தில் கற்றதில்லை
சூடும் பூவை தென்றல்தொட்டே
. சிறக்கும் கற்றதில்லை
ஒடும் காற்றின் உரசும் நளினம்
. உலகிற் படித்ததில்லை
மாடும் கன்றை அம்மாஎன்கும்
. மனதில் பண்புதனை
தேடும் கல்விஎன்றே கற்றுத்
. தேர்வும் எழுதவில்லை
பாடும் பட்டலை மாந்தர் அறிவெழப்
. பள்ளி சென்றிடினும்
நாடும் குருவுடை நல்லோர் சிந்தனை
. நலனைத் தந்திடினும்
காடும் மலையும் கொண்டோர் பூமி
. கொள்கையில் வாழுபவர்
ஊடும் இதனில் உள்ளோர் அனுபவம்
. உண்மைப் பாடங்களாம்
நாடும் மனமும் நலிந்ததே போம்பின்
. நாமதில் கற்கின்றோம்
கூடுமுறவுகள் கொள்கை பிரித்தார்
. குற்றம் கற்கின்றோம்
சாடும் பொழுதினில் பொய்களில் ஊறிச்
. சற்றே மதி கொண்டோம்
வாடும் மனதில் சுதந்திரம் அற்றோர்
. வறுமை கற்கின்றோம்
ஒற்றுமையின்றி ஒரினமேன்மை
. எழுவதில்லை படித்தோம்
கற்றவர் கூடி கனவுகள் கண்டோம்
. காரியம் செயல் மறந்தோம்
சொற்களைப் பூட்டி சுயநலம் கொண்டோம்
. சுற்றிடு முலகினிலே
வெற்றென வாழ்ந்தோம் விடுதலை விட்டே
. செத்திடக் கற்கின்றோம்'
********************
No comments:
Post a Comment