Friday 25 September 2015

சோதியை தொழுவோம்

.
சக்தியென்று சித்தம் கொள்ளு ரத்தம் சுட்டுமுன்
சஞ்சலங்கள் போனதென்று புத்தி கூத்திடும்
பக்திஎன்று வாழும் போது பார்த்து வானெழும்
பார்வைகொள்ளா சோதி எண்ணிப் பக்குவம்பெறு
எக்கதிக்கும் ஆழ்ந்திடா தோர் துன்பமேயிலா
இப்பெருத்த பாரில்வாழ்வும் இன்னல்களற்ற
முக்தி வேண்டி கையெடுத்து மேலை வானிலே
மூண்டெழுந்த ஆதிசக்தி முன் பணிந்திடு

வெட்டி நீக்கு கேடு கொள் விரோதஎண்ணங்கள்
விட்டு நீங்குமச் சுகத்தை வேண்டிக் கேட்டிடு
தட்டிக் கைகள் போடு தாளம் சல்சல்லென்றிட
தாவி ஓடும் நீரின் துள்ளல் போல வாழ்வென
முட்டி ஓடவைக்கும் கெட்ட மூர்க்கம் கொள்ளெண்ணம்
மேன்மை வாழ்வில் நீக்கவும் மனம் களிப்புறும்
வட்டியோடு வந்தகாசு விட்டுச் சென்றிடும்
வந்தே அன்னை தந்தவாழ்வு மொட்டவிழ்ந்திடும்

சுட்டுச் சாம்பலாகும் மேனி தூய்மை கொள்ளவும்
சுந்தரப் பொன் வானின் வீச்சொளிக்குள் ஆகவும்
எட்டிப் பாயும் காட்டுவாழ்விலங்கின் கொள்மனம்
இன்றிப் பூ வதன் இதழ்கள் போல் விளங்கவும்
கட்டி மஞ்சள் பூசம் மேனி காமுகர்களால்
கட்டியாள நெஞ்சும்கூசிக் கண்டிருப்பதும்
தட்டிக்கேட்க விட்டிவைகள் நீயெழுந்திடு
தர்மம்காணத் தீரம் வேண்டித் தீயைக் கேட்டெழு

மட்டியோடு மாமடையன் மற்றும்தன்மதி
மட்டமான வன் மங்கை யர்மீது வன்மமும்
இட்டு வாழ்பவன் இரக்க சிந்தையற்றவன்
ஏற்ற வேடமிட்டு இந்த மண்ணில் வாழ்பவன்
சுட்டிநின் விரலைத் தூக்கி சொல்லியே இவர்
சூழ வாழும் தேசத்தோரின் சித்தம் நல்விதப்
பட்டு வாழ்வெனும் தமிழர் வீரம் கொண்டிடப்
பரந்த வானெழுந்த சோதி பக்கம் நின்றுகொள்
*****************

No comments:

Post a Comment