Saturday 26 September 2015

நீரா நெருப்பா`


பூமுடித்தாள் பொட்டுவைத்தாள்
. பூவிதழின் வாச மிட்டாள்
வாகுடிக்கத் தேன் எனவே
. வந்தவண்டைச் சுட்டெரித்தாள்
யார்முடிகொள் காவலனோ
. யௌவனத்தில் கால் பிடிக்கும்
தேர்முடிக்கு ஒப்பஎழில்
. தேகமதில் வார்த்தெடுத்தாள்

பார்வியந்து போற்றுமவள்
. பார்வை யதன் சாயல் பட்டால்
எர்பிடித் துழுவதெலாம்
. எங்கிருந்து கற்றுவந்தாள்
வார் பிடித்து வானஎழில்
. வண்ணமதி மேனிகொண்டாள்
ஊர் பிடித்துத் தூற்றமுதல்
. ஓர்வழியைக் காணுமென்றாள்

கார் விரிந்த கூந்தல்தனைக்
. கோதி யகில் வாசமிட்டா:ள்
மார்பி லெனைத் தாங்கியவள்
. மையல் தந்து போதையிட்டாள்
கீர் எனவெ தேகம் சுற்ற
. கேட்டகாமல் ஆடவைத்தாள்
நேர் பார்த்துவா அழைத்தேன்
. நெஞ்சுக்குட் புகுந்துவிட்டாள்

தூர் எடுத்த மண்ணெனவே
தேகம்குளிர் தோற்றம் கொண்டாள்
தீர் பிடிக்கும் துன்பமென்றால்
. தென்றலென ஆகி வந்தாள்
பூர்வீக புண்ணியமோ பேதை
. எந்தன் மாலை கொண்டாள்
நீரூறும் கண்களினி
. நிச்சயம் காண் ஆனந்தமே

No comments:

Post a Comment