Saturday 17 October 2015

ஆட்கொள்வாள் எம்மை

நீயிருந்தாய் என்னருகே
. நினைவெழுதும் கற்பனைகள்
. நெஞ்சிலிசை கொண்டினிமைகாணவே
தாயிருந்தால் காணும் சுகம்
.  தந்தவள் நீ தந்ததனால்
.  தானுமெழில் கொண்டகவிகூறவே
போயிருந்தால் கோவில்சி.லை
. போட்டுடைக்க மண்கலயம்
. போகமென்னுமாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம்
.  வாடி நின்றால் தேய்ந்திடலாம்
.  வாழ்க்கைகொண்ட இந்தநிலை கண்டுமே

சேயழுதால் தாயணைக்கும்
.  சேர்ந்தகொடி மரமணைக்கும்
.  சீறிவரும் மாநதியு,மோடியே
தூய கடல் சேர்ந்திணையும்
.  தூக்கம்விழி கொண்டணையும்
.  துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத்
.  தோன்றிடாது வாழ்வுதனை
.  தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில்
.  பூத்த ஒளி பொலியும்வண்ண
.  பேரொளியாம் ஞானசக்தி ரூபமே

கானகத்தில் காணும்மரம்
.  காற்றடிக்க ஊதுமூங்கில்
.  காட்டருவி வீழுமெழில் கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித்
.  தாட அயல் வெண்முகிலில்.
.  வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை
.  மேவிஎழுங் காற்றின்சத்தம்
.  மீறி எழும் கடல்தனையும் ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித்
.  தந்தவுடல் கெட்டுமென்ன
.  தகிக்கவைத்து ஆட்கொள்ளுவாள் எம்மையே

No comments:

Post a Comment