Wednesday 25 November 2015

சக்தி கொடு

 சக்தி கொடு சஞ்சலந் தீர் சற்குணவி ருத்தியொடு
புத்திகொடு புன்னகைத்தே பூவுலகில் வாழ்வமைக்க
உத்திகொடு உண்மைகொடு உத்தரிக்கும் வாழ்வினிலி
ருத்தியெனை வாழ்விழக்கும்  இன்னல் பெறச்செய்யாதே

ரத்தினமாய் மேனிசிவந்தொற்றிய வெண்மேகமதுள்
புத்தொளியும் கொண்டகதிர் போதினில் தன் தலைகாட்ட
சுத்தஓளி வான்பரவிச் சுதந்திரமென்றிசை பாடப்
பித்தெனவே ஆகும்மனம் பேணுமின்பம் பெருகாதோ !       

மெத்தனமோ மேவும்நிலை மேதினியில் வேண்டா நல்                          
    
உத்தமியே உள்ளுணர்வீல்.ஓடும் அலை தூங்காது
வித்தையெனக் கற்றிடும் நம் வீரமொழி இன்னிசைப்பா
எத்தனை யென்றில்லாது நித்தம்மொன்று பூக்கவிடு

சத்தமில்லா வண்டமரத் தேன்மலரும் ஊட்டும்மது
நித்தமுமென் கையெழுத நின்னொளியும் கூட்டிவிடு
கத்தி யெனும் கூர்கொளவும் காலமதில் தீட்டியெடு
அத்திகட்டாக் கவிதைமது  அள்ளியெனை ஈயவிடு

No comments:

Post a Comment