Wednesday 25 November 2015

செய்தவள் அவளே!

திக்கெட்டும் சேதிகள் தேடிதிரி இன்னும் 
தேரெனச் செய்தவள் அன்னை
சிக்கட்டும் உள்மனம் தீயினிலே எனச்
சேர்த்திடவோ வெறும் பொன்னை 
தக்கதக என்றே மின்னிடச் செய்யவும்
தந்தவளோ தீயில் என்னை
தக்கத் தக தக தக்கன காணவோ 
தந்ததுமென் என்னுள் என்னை?

இக்கதியே னதை  இன்னும் புரிந்திலேன்
இக்கணம் மட்டிலும் இல்லை
பக்கத்திலே அவள்பட்டு ஓளிர்ந்திடப்
பார்த்தவன் என்செய்ய கண்ணை
முக்கனம் கேட்டவன் மூக்கில் விரலிட
முன்னேவிட்டால் இனி யென்னை
எக்குறைவுமற்று காத்திடுவாள் என்றே
எண்ணினேன் தாஅருள்தன்னை

அற்புதமே அன்னை யாக்கைஅளித்தவள்
ஆக்கலழித்திட முன்னை
பற்றுதலால் எனைப் பற்றிநின்றாள் வெகு
பக்குவமாக வேதனை
சுற்றிநின்ற துயர் போகிடச்செய்துமே
சுத்தமென் றாக்கிட என்னை 
இற்றைய நாள் ஒளி யீந்தனளோ இனி
என்வழி செல்லடிசொல்லாய்

நித்தியமே சக்தி நிச்சயமே ஒளி
நீளவிண்ணின் ஆதிமுன்னை
சத்திய காரூண்ணிய சித்தி விளைப்பவள்
செய்யென சொல்வதும் உண்மை
புத்தியிலே கடும் போதனை செய்வளோ
பார்த்திருந்தேன் இனி என்னை
எத்திசையில் வழிகாட்டுவளோ அதை
எண்ணிக் கிடக்கிறேன் அன்னை!

******************************

No comments:

Post a Comment