Wednesday 25 November 2015

காலம் வராதோ?

பொட்டுவைத்தாள் தீஎழவும்  
.  புன்னகைத்தே சுட்டுவிடப்
பட்டெரியும் வீறுடனோர் 
.   பாங்கு மமைத்தாள்
ஒட்டவைத்தாள் ஓருயிரை 
.  உள்மனதில் அன்பை இட்டாள்
கட்டி வைத்தால் காலிரண்டை
.  காதல் என்றிட்டாள் 
.  
தொட்டுவிட்டால் தோலுணர்வில் 
.   சொர்க்கம் என்றே இன்பமிட்டாள்
தோளில் ஒரு மாலை யானை 
.   போடவும் வைத்தாள்
கட்டில் அர சேறவைத்தாள் 
.  கற்பனையில்  மோகமிட்டே 
காற்றுடனே பார்த்திருக்கக் 
.  கரைந்திடச் செய்தாள்

மொட்டு இதழை கட்டவிழ்த்தாள் 
.  முன்மதுவை இட்டுவைத்தாள்
மெட்டிசைக்கும் வண்டினத்தை 
. தொட்டுண்ண விட்டாள்
திட்டமிட்டாள் தேடி வந்தே 
.  தேவைஎனும் போதினிலே
தட்டுமிட்டாள் தட்டில்பணி 
.  தக்கது மிட்டாள்

மட்டுமட்டாய் வாழ்வினிலே 
.  மாறி அந்தம் ஆகையிலே
கொட்டிவைத்தாள் சக்தி எனும்
.  கொள்கையைக் கூட்டி
விட்டமதைக் கூடச் செய்தாள்  
.  விரிவானின் எல்லையின்றி
வட்டமென வான் வளையும் 
.  அற்புதம் செய்தாள்

கெட்டுவிடச் செய்வதென்ன 
  கீழ்குடிகள் காவல்கொள்வோம்
கட்டவிழ்த்துக் கண்துலங்கச் 
,    காணவை என்றால்
முட்டவிழி மலர வைத்தாள் 
..   முன்னிருந்து ஆக்குவித்தாள்
மூவுலகும் தோற்றமெழக் 
    முன்னி றுத்தினாள்

வட்டமெனச் சுற்றுமந்த 
.   வான்வெளியின்கோளங்களை
விட்ட வழிசென்றெழிலைக் 
  .  விழி கொள்ளுவேனோ
அட்ட திக்கும் சென்றவளின் 
.     ஆற்றலுடன் நானிணைந்து
ஆன இருள் தான் விரட்டும் 
.    காலம் வராதோ

No comments:

Post a Comment