Saturday 7 May 2016

இருள் கொள்வதோ?





பனிமூடிப் பசும் புல்லும் பளிங்காகலாம்
பழிகூடும் அரச்சொன்று படைகாணலாம்
தனியோடும் முகில் மூடிச் சுடர் தாழலாம்
தரைமேவி இருள்மூடித் தடுமாறலாம்
கனிதேட இலைமூடும் காற்றோட நாம்
கனவோடும்  இமைமூடித் துயிலாகலாம்
இனி மூடி மனம் ஒன்று இருந்தாலுமே
இசைகொண்ட தமிழின்பம் இலையாகுமே

பணிகூடிப் பொழுதின்றிப் பகல்போகலாம்
பரிவின்றி மனைகூடிப் பலர் வாழலாம்
தணிவின்றிப் பெருஞ் சோகம் தனைவெல்லவும்
தமிழ்மீது வருந் தாகம் தலைகொள்ளவும்
மணியென்னும் இசைசந்தம்,மனமீதினில்
மறைகின்ற நிலைகொள்ள முகம் காண்பதோ
அணிகின்ற  துகில்ஆடை அழகாக்கலாம்
அகம்கொண்ட எழிலின்பம் அதை யாக்க வா

இனியில்லை எனும் எண்ணம் இடைவந்ததோ
இரவான போதில்விடி வில்லை என்பதோ
புனிதத்தை கொள்ளின்பம் பூஞ்சோலையும்
புயல் வந்து  விளையாடப் புவிசெ ய்வதென்
தனிவீழ்ந்தோம் என எண்ணல் தவறல்லவோ
தருமத்தின் செயலுக்கு அவம் அல்லவோ
குனியாது  நிலை கொள்ளக் குரலொன்று தா
குணமாக நில்லன்பைக் குறைவின்றித் தா

No comments:

Post a Comment