எனக்குள் ஒருவன் இருகின்றான் - அவன்இன்பமும் துன்பமும் ரசிக்கின்றான்கனக்கும் துயர்மனம் கொண்டாலும் - அவன்களிப்பில் பஞ்சென மிதக்கின்றான்தனக்கெனப் பாதை வகுத்தவனாம் - அவன்தனிவழிப் பயணம் நடப்பவனாம்வனத்தில் மானென வாழ்பவனாம் - பகை’வரும்போ தஞ்சா வீரனுமாம்குணத்தில் கோட்டையின் மன்னவனாம் - அவன்குலவும் தென்றலின் இளமகனாம்கணக்கில் கவிதையின் ஆற்றோட்டம் - இவன்கனவை ஆக்கிடப் போராட்டம்மணக்கும் மல்லிகை வாசமதோ - இவன்மனமும் வாய்மைசொல் பூவனமோகணத்தில் கற்பனை ரதமேறி - அவன்கைதொடும் தாரகை ஒருகோடிதடைகள் வருவது தானுடையும் - அவைதண்ணீர்க் குளத்திடை குமிழிகளாம்நடைகொள் பாதையில் குளிர்காற்று - அதில்நந்த வனம் எனும் உணர்வூற்றுஇடையில் ஒருமயில் நடமாடும் -அதுஇன்னிசைக் கூத்திடக் குயில்பாடும்விடைகள் தேடியே ஓடும்நதி - எனவிளங்கும் வாழ்வின் போக்கினிலேஇடையே விதியும் எழுந்தாட - இவன்எண்ணத் திசையினில் காட்சிமுரண்மடையும் உடையா நீர்த் தேக்கம் - எனும்மதியின் பொறுமை தோற்றாலேஉடையின் உண்மைப் பிரவாகம் - அதைஉணர்வோ கண்டால் வலி சேர்க்கும்படைகள் கொண்டெழுந் தணிசேர்வாய் - உன்பழமைத் தமிழ்க்கவி இடர் வெல்லும்
*************************
No comments:
Post a Comment