Sunday, 31 May 2015
தமிழ் மகள் வந்தாள்
இவளும் அவளும்
(ராமன் தேடிய சீதை)
காலங்கள் காண்வழிக் காலைகள் பொன்னொளி
காணப் புலர்ந்தனவோ
கோலத்தில் பெண்ணெனும் கோடி எழில் கொஞ்சும்
கோதை என்னாயினளோ
ஞாலத்திலே தமிழ் பெண்ணென் றிலக்கிய
நங்கை பல வகுத்தார்
வேலை வில்லம்பினை வைத்து மனம் கொல்லும்
விந்தை மகளின்றெங்கே
காவியமும் தமிழ்கூறும் கதை இன்னும்
காணு மிலக்கியங் கள்!
ஆ..வினோத எழில் அற்புதம் மேவிய
ஆரணங்கைப் படைத்தார்
ஓவியத் தூரிகை வண்ணங் கொள்ளா தெழில்
ஊட்டிய பொன்மகளாம்
பாவி இதயத்தில் கீறிவைத்தே பல
ஆண்டுகள் தேடுகிறேன்
கோவலன் யானெனில் லீலை புரிந்திட
மாதவி தேடுகிறேன்
காவலன் பொய்யெனில் நாட்டையழித்தவள்
கண்ணகி காணுகிறேன்
தேவதையோ எனும் தூய மனம் கொண்ட
சீதையைத் தேடுகிறேன்
ஆவதை செய்யென்ற இராவணனின் தங்கை
அன்பினைக் காணுகிறேன்
பாவலனாகியும் பாட்டமைக்க அதைப்
பாடிக் களித்திடுவாள்
நாவளம் கொண்டெவர் பாடிடினும் அங்கு
நாட்டிய மாடி நிற்பாள்
தாவ நிலம்துள்ளத் தந்தனதோம் சொல்லி
தான் நடமென்பதல்ல
ஆவல்கொண்டே மன நாட்டிய மேடையில்
ஆடிக் களிப்பளுண்டோ
பேரரும் நன்னெழில் பெண்ணி னிலட்சணம்
போற்றிய நூல்கள் கண்ட
சாரமுடன் உடல் வாகினில் பத்தினி
சித்தினி தேவையல்ல
போரதின்றிச் சிறு பிள்ளை மனம் கொண்ட
பெண்ணின் மிருதுகெடா
தூரமும் அன்பினைக் வைத்துநிற்கா நல்ல
தூயதோர் மங்கையுண்டோ
காவியம் கூறும் சகுந்தலையும் நளன்
கண்ட தமயந்தியும்
தேவி திருமகள் கொள்ளழகும் எமன்
தோற்றிட ஆவி கொண்டாள்
சாவித்திரி போலும் சற்றே பெண்மைகொண்ட
சாயலுடன் திகழும்
பூவிரியும் மதுகொள்மலர்போல் ஒரு
பெண்ணினைத் தேடுகிறேன்
தண்மையில் பொய்கை குளிரெடுப்பாள் தினம்
தாமரை போல் சிரிப்பாள்
விண்ணிடை ஞாயிறு வந்துவிட்டால் இதழ்
வெம்மை கண்டே நெகிழ்வாள்
பண்ணும் கிரிகைகள் பாதகமின்றி மெய்
பாசத்துடன் திகழ்வாள்
எண்ணும்மனம் எந்த வேளைசினமின்றி
இன்ப உணர்வு கொள்வாள்
(இன்றைய காணும் சின்னத்திரை பெண்கள்)
வாயுரம் கொண்டவள் வார்த்தை கசப்பதும்
வாழ்வில் வலிகொடுத்தே
தாயுறவென்னும் தரமிழந்தே வெறும்
தன்னலம் கொண்டவளாய்
பாயுமலை எழுந்தோடும் சுனைஒன்றில்
பார்க்கும் இலையில் தண்ணீர்
மாயமென்றே உருண்டோடும் நிலைகொண்ட
மங்கையைக் காணுகிறேன்
கன்னத்தில் முத்தமிட்டே கதைபேசிடும்
காரிகை யாயிடினும்
வன்மை யுரம் நெஞ்சில் நஞ்சு பரந்திட்ட
வஞ்சம் விளைவதென்ன
தன்னலமும் தனதாளுமை கொள் ளகங்
காரமும் நெஞ்சில்கொண்டே
என்ன எடுப்பினும் நின்றெதிர்க்கும் ஒரு
ஏந்திழை காணுகிறேன்
பெண்ணினம் ஆவல் கொண்டே மனம் அத்தகை
பேசும் படங்கள் கண்டே
கண்ணிடை நீர்பெருக் காகி வழிந்திடக்
காட்சியோ டொன்றுகிறார்
மண்ணிடை மாதர் இழிந் தவர் என்பதை
மன்னித்தே ஏற்றுவிட்டார்
தண்மைமனதும் விகாரமுற்றே எண்ணத்
தாழுணர் வாகிவிட்டார்
........................................ ...
காலங்கள் காண்வழிக் காலைகள் பொன்னொளி
காணப் புலர்ந்தனவோ
கோலத்தில் பெண்ணெனும் கோடி எழில் கொஞ்சும்
கோதை என்னாயினளோ
ஞாலத்திலே தமிழ் பெண்ணென் றிலக்கிய
நங்கை பல வகுத்தார்
வேலை வில்லம்பினை வைத்து மனம் கொல்லும்
விந்தை மகளின்றெங்கே
காவியமும் தமிழ்கூறும் கதை இன்னும்
காணு மிலக்கியங் கள்!
ஆ..வினோத எழில் அற்புதம் மேவிய
ஆரணங்கைப் படைத்தார்
ஓவியத் தூரிகை வண்ணங் கொள்ளா தெழில்
ஊட்டிய பொன்மகளாம்
பாவி இதயத்தில் கீறிவைத்தே பல
ஆண்டுகள் தேடுகிறேன்
கோவலன் யானெனில் லீலை புரிந்திட
மாதவி தேடுகிறேன்
காவலன் பொய்யெனில் நாட்டையழித்தவள்
கண்ணகி காணுகிறேன்
தேவதையோ எனும் தூய மனம் கொண்ட
சீதையைத் தேடுகிறேன்
ஆவதை செய்யென்ற இராவணனின் தங்கை
அன்பினைக் காணுகிறேன்
பாவலனாகியும் பாட்டமைக்க அதைப்
பாடிக் களித்திடுவாள்
நாவளம் கொண்டெவர் பாடிடினும் அங்கு
நாட்டிய மாடி நிற்பாள்
தாவ நிலம்துள்ளத் தந்தனதோம் சொல்லி
தான் நடமென்பதல்ல
ஆவல்கொண்டே மன நாட்டிய மேடையில்
ஆடிக் களிப்பளுண்டோ
பேரரும் நன்னெழில் பெண்ணி னிலட்சணம்
போற்றிய நூல்கள் கண்ட
சாரமுடன் உடல் வாகினில் பத்தினி
சித்தினி தேவையல்ல
போரதின்றிச் சிறு பிள்ளை மனம் கொண்ட
பெண்ணின் மிருதுகெடா
தூரமும் அன்பினைக் வைத்துநிற்கா நல்ல
தூயதோர் மங்கையுண்டோ
காவியம் கூறும் சகுந்தலையும் நளன்
கண்ட தமயந்தியும்
தேவி திருமகள் கொள்ளழகும் எமன்
தோற்றிட ஆவி கொண்டாள்
சாவித்திரி போலும் சற்றே பெண்மைகொண்ட
சாயலுடன் திகழும்
பூவிரியும் மதுகொள்மலர்போல் ஒரு
பெண்ணினைத் தேடுகிறேன்
தண்மையில் பொய்கை குளிரெடுப்பாள் தினம்
தாமரை போல் சிரிப்பாள்
விண்ணிடை ஞாயிறு வந்துவிட்டால் இதழ்
வெம்மை கண்டே நெகிழ்வாள்
பண்ணும் கிரிகைகள் பாதகமின்றி மெய்
பாசத்துடன் திகழ்வாள்
எண்ணும்மனம் எந்த வேளைசினமின்றி
இன்ப உணர்வு கொள்வாள்
(இன்றைய காணும் சின்னத்திரை பெண்கள்)
வாயுரம் கொண்டவள் வார்த்தை கசப்பதும்
வாழ்வில் வலிகொடுத்தே
தாயுறவென்னும் தரமிழந்தே வெறும்
தன்னலம் கொண்டவளாய்
பாயுமலை எழுந்தோடும் சுனைஒன்றில்
பார்க்கும் இலையில் தண்ணீர்
மாயமென்றே உருண்டோடும் நிலைகொண்ட
மங்கையைக் காணுகிறேன்
கன்னத்தில் முத்தமிட்டே கதைபேசிடும்
காரிகை யாயிடினும்
வன்மை யுரம் நெஞ்சில் நஞ்சு பரந்திட்ட
வஞ்சம் விளைவதென்ன
தன்னலமும் தனதாளுமை கொள் ளகங்
காரமும் நெஞ்சில்கொண்டே
என்ன எடுப்பினும் நின்றெதிர்க்கும் ஒரு
ஏந்திழை காணுகிறேன்
பெண்ணினம் ஆவல் கொண்டே மனம் அத்தகை
பேசும் படங்கள் கண்டே
கண்ணிடை நீர்பெருக் காகி வழிந்திடக்
காட்சியோ டொன்றுகிறார்
மண்ணிடை மாதர் இழிந் தவர் என்பதை
மன்னித்தே ஏற்றுவிட்டார்
தண்மைமனதும் விகாரமுற்றே எண்ணத்
தாழுணர் வாகிவிட்டார்
........................................
இந்த வாழ்க்கை
நீள உயர்மரக் கொப்பினிலே - கரு
நீலக்குயில் ஒன்று பாடியது
தாளமிடும் சுனை பக்கத்திலே - அலை
தென்றல் வருடியே ஓடியது
பாளமெனும் தங்கம் போலும் நிலா - பனி
போர்க்கும் மலையதன் பின்னேவர
ஆழக் கிடந்த மண்பூமியிலே - சேற்றில்
ஆடிநெளிந்தங்கே வாழும்புழு
கீழத்தரையொடு நின்றபடி - அந்தக்
கானக் குயிலினை கேட்கின்றது
வாழக் கிடைத்த கருங்குயிலே - உன்றன்
வாழ்க்கையில் எத்தனை இன்பமுண்டு
சூழப் பறவைகளோடு நீயும் - நற்
சு-தந்திரமாகவே சுற்றுகிறாய்
ஆழப் புதைந்திருள் மண்ணுக்குள்ளே - வாழ
ஆன உடல்எனக் கேன்வந்தது
நீல உயர் வெளி வானத்திலே - நானும்
நின்னைபோலும் பறந்தோடிவர
கால காலமாக ஆசை கொண்டேன் - ஆயின்
காற்றிலேறும் விதம் கற்றறியேன்
வாலைகொண்டாய் இரு(இ)றக்கைகளும் - உன்னை
வானில் செலுத்துவை தானறிவேன்
நூலை போலும் ஒரு தேகம்கொண்டேன் - எந்தன்
நெஞ்சம் துயருறச் செய்தவர்யார்?
(குயில்)
காரணம் ஏதென நானறியேன் - இதற்
கானபதில் தனும் நான் உணரேன்
தோரணங்கள் போல வானிலெங்கும் - தொங்கும்
தூய ஒளிர் கதிர் தொட்டில்களை
பாரதையும் செய்த சக்தியதே- இங்கு
பார்த்தெம்மில் பல்வகை தேகமிட்டாள்
யாரங்கே யாரிங்கே என்பதெல்லாம் - அந்த
ஞாயிறைச் செய்தவள் ஞானமன்றோ
ஆழிதனைப் பெரிதாயமைத்தாள் - அதில்
ஆடும் கடற்திரை ஓடவிட்டாள்
சூழின்பத் தென்றலும் தொட்டுவிடா - அலை
துள்ளும் கயலினம் உள்படைத்தாள்
வாழிர் எனமாந்தர் இங்கமைத்தாள் - ஒரு
வட்ட வரையின்றிச் சக்திதந்தாள்
ஏழில்குறைத்தொரு புத்திதந்தாள் - அதை
ஏற்றபடி அங்கும் இங்குமிட்டாள்
நல்ல மலர்களை வாடவிட்டாள் - வெறும்
நஞ்சுடை கள்ளிக்கு முள்ளுமிட்டாள்
கொல்லும் வன விலங் கெங்குமிட்டாள் - இங்கு
கூடும்மாந்தர் மனதுள்ளும் வைத்தாள்
வல்லமை கொண்ட மனம்படைத்தாள் - அதை\
வாரி மகளிர்க்கு தந்துவைத்தாள்
செல்லும் மிடமெங்கும் பூ உதிர்த்து முள்ளைச்
சேர்த்து இறைத்தவள் தானறிவாள்
(அப்போது சிறு தொலைவில் இருக்கும்
வயலில் உழுதபடி ஒரு மனிதன் பாடுகிறான்
(வேறு)
ஆசை கொண்டு தோன்றியதே தேகம் - அது
ஆக்குந் துன்பம் எல்லையற்ற சோகம்
தூசை யொத்த தாயுடலும் போகும் - இதில்
துள்ள வைக்கும் இரத்தம் காய்ந்து வேகும்
வாசமுள்ள பூவும் நாளில் வாடும் - அதில்
வந்திருந்த வண்டு ஓடிப் போகும்
பாசம் கொண்ட தாயிருந்த போதும் - உயிர்
பட்ட துன்பத்தில் விலகக் காணும்
யாருக்கிந்த மண்ணின் ஆசை கூடும் - அது
யாக்கையில் உயிர்பறித்தும்போடும்
நீருக்குள்ளும் வேலிபோட்டு காக்கும் - அந்த
நீசமிக்க தாக எண்ணம் ஆக்கும்
பாருக்குள் இவர்கள் வாழ்வுமீண்டும் - ஓர்
பக்குவ மெடுத்து மேனி கொள்ள
வேருழும் புழுக்களாக ஆவர் - மண்ணில்
வேட்கை கொண்டலைந்த பாவிமாந்தர்
பேருக்கும் புகழ் என்றன்றி நன்மை - பல
பேசரும் வகை விளைத்த மாந்தர்
காருக்குள் ஒளிர்ந்த தீபம் போலும் - இன்னும்
காக்கும் வாழ்வுயர்ந்த பண்பும் சான்றும்
சேருமுள்ளம கண்ட அன்பு வாழ்வும் - அவர்
செய்த நன்மைகள் மரத்தின்மீது
சாரும் வான் பறந்த பட்சி யாகும் - உயர்
செல்லும் புள்ளினங்க ளாகக் கூடும்
(கற்பனை)
நீலக்குயில் ஒன்று பாடியது
தாளமிடும் சுனை பக்கத்திலே - அலை
தென்றல் வருடியே ஓடியது
பாளமெனும் தங்கம் போலும் நிலா - பனி
போர்க்கும் மலையதன் பின்னேவர
ஆழக் கிடந்த மண்பூமியிலே - சேற்றில்
ஆடிநெளிந்தங்கே வாழும்புழு
கீழத்தரையொடு நின்றபடி - அந்தக்
கானக் குயிலினை கேட்கின்றது
வாழக் கிடைத்த கருங்குயிலே - உன்றன்
வாழ்க்கையில் எத்தனை இன்பமுண்டு
சூழப் பறவைகளோடு நீயும் - நற்
சு-தந்திரமாகவே சுற்றுகிறாய்
ஆழப் புதைந்திருள் மண்ணுக்குள்ளே - வாழ
ஆன உடல்எனக் கேன்வந்தது
நீல உயர் வெளி வானத்திலே - நானும்
நின்னைபோலும் பறந்தோடிவர
கால காலமாக ஆசை கொண்டேன் - ஆயின்
காற்றிலேறும் விதம் கற்றறியேன்
வாலைகொண்டாய் இரு(இ)றக்கைகளும் - உன்னை
வானில் செலுத்துவை தானறிவேன்
நூலை போலும் ஒரு தேகம்கொண்டேன் - எந்தன்
நெஞ்சம் துயருறச் செய்தவர்யார்?
(குயில்)
காரணம் ஏதென நானறியேன் - இதற்
கானபதில் தனும் நான் உணரேன்
தோரணங்கள் போல வானிலெங்கும் - தொங்கும்
தூய ஒளிர் கதிர் தொட்டில்களை
பாரதையும் செய்த சக்தியதே- இங்கு
பார்த்தெம்மில் பல்வகை தேகமிட்டாள்
யாரங்கே யாரிங்கே என்பதெல்லாம் - அந்த
ஞாயிறைச் செய்தவள் ஞானமன்றோ
ஆழிதனைப் பெரிதாயமைத்தாள் - அதில்
ஆடும் கடற்திரை ஓடவிட்டாள்
சூழின்பத் தென்றலும் தொட்டுவிடா - அலை
துள்ளும் கயலினம் உள்படைத்தாள்
வாழிர் எனமாந்தர் இங்கமைத்தாள் - ஒரு
வட்ட வரையின்றிச் சக்திதந்தாள்
ஏழில்குறைத்தொரு புத்திதந்தாள் - அதை
ஏற்றபடி அங்கும் இங்குமிட்டாள்
நல்ல மலர்களை வாடவிட்டாள் - வெறும்
நஞ்சுடை கள்ளிக்கு முள்ளுமிட்டாள்
கொல்லும் வன விலங் கெங்குமிட்டாள் - இங்கு
கூடும்மாந்தர் மனதுள்ளும் வைத்தாள்
வல்லமை கொண்ட மனம்படைத்தாள் - அதை\
வாரி மகளிர்க்கு தந்துவைத்தாள்
செல்லும் மிடமெங்கும் பூ உதிர்த்து முள்ளைச்
சேர்த்து இறைத்தவள் தானறிவாள்
(அப்போது சிறு தொலைவில் இருக்கும்
வயலில் உழுதபடி ஒரு மனிதன் பாடுகிறான்
(வேறு)
ஆசை கொண்டு தோன்றியதே தேகம் - அது
ஆக்குந் துன்பம் எல்லையற்ற சோகம்
தூசை யொத்த தாயுடலும் போகும் - இதில்
துள்ள வைக்கும் இரத்தம் காய்ந்து வேகும்
வாசமுள்ள பூவும் நாளில் வாடும் - அதில்
வந்திருந்த வண்டு ஓடிப் போகும்
பாசம் கொண்ட தாயிருந்த போதும் - உயிர்
பட்ட துன்பத்தில் விலகக் காணும்
யாருக்கிந்த மண்ணின் ஆசை கூடும் - அது
யாக்கையில் உயிர்பறித்தும்போடும்
நீருக்குள்ளும் வேலிபோட்டு காக்கும் - அந்த
நீசமிக்க தாக எண்ணம் ஆக்கும்
பாருக்குள் இவர்கள் வாழ்வுமீண்டும் - ஓர்
பக்குவ மெடுத்து மேனி கொள்ள
வேருழும் புழுக்களாக ஆவர் - மண்ணில்
வேட்கை கொண்டலைந்த பாவிமாந்தர்
பேருக்கும் புகழ் என்றன்றி நன்மை - பல
பேசரும் வகை விளைத்த மாந்தர்
காருக்குள் ஒளிர்ந்த தீபம் போலும் - இன்னும்
காக்கும் வாழ்வுயர்ந்த பண்பும் சான்றும்
சேருமுள்ளம கண்ட அன்பு வாழ்வும் - அவர்
செய்த நன்மைகள் மரத்தின்மீது
சாரும் வான் பறந்த பட்சி யாகும் - உயர்
செல்லும் புள்ளினங்க ளாகக் கூடும்
(கற்பனை)
நானும் பூவும்
தோட்டத்தில் நின்றது ரோஜாச்செடி - அதில்
துள்ளி எழுந்ததோர் பூமலர்ந்து
நாட்டத்தில் மென்மையை நான்ரசிக்க - அது
நாறிக் கவர்ந்ததோ வண்டிலொன்று
கூட்டத்தில் கொண்ட கு தூகலமோ - மது
கொண்டு களித்தபின் வண்டெழுந்து
ஓட்டத்தில் சென்றது பூவிருந்து - வாடி
ஓரத்தில் வீழ்ந்தது நாளிலொன்று
நீட்டத்தில் நானும்பின் திண்ணையிலே - உடல்
நீளக் கிடந்தவன் எண்ணத்திலே
தேட்டத்தில் என்னவோ தேன்நிறைந்தும் - அதைத்
தின்னக்கொடுத்தது வீணனுக்கு
பாட்டில் கிடக்குது பாராயிப்போ - அது
பட்டு விழுந்திடல் பாவமன்றோ
வாட்டிக் கருக்கும் தன் வாழ்வறிந்தும் மலர்
வண்டை அழைத்துண்ண விட்டதென்ன
பூவும் சிரித்தது பார்த்தெனையே - அட
போடா மனிதா உன் புத்தியென்ன
நாவும் நல்லோசையும் கொண்டுமென்ன - உந்தன்
நாறும் உடல்தரும் நன்மையென்ன
ஏவும் செயல்கொண்ட தின்னாதவை - இன்னும்
ஏழைசெல்வம் எனும் இரண்டுவகை
யாவுமொரு தினம் வாழ்ந்திடினும் - எங்கள்
ஞானம் சிறித்தேனும் உன்னில் உண்டோ
ஏட்டில் எழுதிப் படிப்பதொன்று - பின்னர்
எட்டியிடிப்பது கோவில் கண்டு
நாட்டில் நடப்பது ஏதுநலம் - செய்கை
நாலுவிதம் கரும் புத்தி கொண்டு
போட்டி பொறாமையும் வஞ்சமென - நீவிர்
போடும்மனவேடம் புத்ததவம்
வேட்டையாடுவதும் உன்குலமே - அந்த
வேஙகை அரிவேழம் வீழ்வதல்ல
கேட்ட பொழுதினில் ஈய்வதில்லை - அன்பு
கேடு தரும் வாழ்வு இன்பமில்லை
மீட்ட நினைந்து கை வீணைகொண்டால் - அங்கு
மென்னிசை யன்று முழக்கங்களே
தீட்டினைக் கொண்டுமே காணுகிறீர் - நீவிர்
சேர்த்தது இச்சையும் மோகமும்காண்
சாட்டுங் கை குற்றமும் அன்னியரை - உமைச்
சார்ந்தவை பொய்யுடன் சூதுவகை
நாட்டினி லெத்தனை பூக்களுண்டு - வரும்
நல்ல மணம்பல வண்ணம் வேறு
கோட்டினின் எல்லையைத் தாண்டவில்லை -நாமும்
குற்றம் கொடுமைகள் செய்வதில்லை
ஆட்டிச் சுழலிடும் பூமியிலே - எங்கள்
ஆயுள் குறையினும் பூமலர்வில்
கூட்டிகொடுப்பது இன்பம்மொன்றே - எங்கள்
கொள்கை மேன்மை இதைக் கேள்மனிதா!
துள்ளி எழுந்ததோர் பூமலர்ந்து
நாட்டத்தில் மென்மையை நான்ரசிக்க - அது
நாறிக் கவர்ந்ததோ வண்டிலொன்று
கூட்டத்தில் கொண்ட கு தூகலமோ - மது
கொண்டு களித்தபின் வண்டெழுந்து
ஓட்டத்தில் சென்றது பூவிருந்து - வாடி
ஓரத்தில் வீழ்ந்தது நாளிலொன்று
நீட்டத்தில் நானும்பின் திண்ணையிலே - உடல்
நீளக் கிடந்தவன் எண்ணத்திலே
தேட்டத்தில் என்னவோ தேன்நிறைந்தும் - அதைத்
தின்னக்கொடுத்தது வீணனுக்கு
பாட்டில் கிடக்குது பாராயிப்போ - அது
பட்டு விழுந்திடல் பாவமன்றோ
வாட்டிக் கருக்கும் தன் வாழ்வறிந்தும் மலர்
வண்டை அழைத்துண்ண விட்டதென்ன
பூவும் சிரித்தது பார்த்தெனையே - அட
போடா மனிதா உன் புத்தியென்ன
நாவும் நல்லோசையும் கொண்டுமென்ன - உந்தன்
நாறும் உடல்தரும் நன்மையென்ன
ஏவும் செயல்கொண்ட தின்னாதவை - இன்னும்
ஏழைசெல்வம் எனும் இரண்டுவகை
யாவுமொரு தினம் வாழ்ந்திடினும் - எங்கள்
ஞானம் சிறித்தேனும் உன்னில் உண்டோ
ஏட்டில் எழுதிப் படிப்பதொன்று - பின்னர்
எட்டியிடிப்பது கோவில் கண்டு
நாட்டில் நடப்பது ஏதுநலம் - செய்கை
நாலுவிதம் கரும் புத்தி கொண்டு
போட்டி பொறாமையும் வஞ்சமென - நீவிர்
போடும்மனவேடம் புத்ததவம்
வேட்டையாடுவதும் உன்குலமே - அந்த
வேஙகை அரிவேழம் வீழ்வதல்ல
கேட்ட பொழுதினில் ஈய்வதில்லை - அன்பு
கேடு தரும் வாழ்வு இன்பமில்லை
மீட்ட நினைந்து கை வீணைகொண்டால் - அங்கு
மென்னிசை யன்று முழக்கங்களே
தீட்டினைக் கொண்டுமே காணுகிறீர் - நீவிர்
சேர்த்தது இச்சையும் மோகமும்காண்
சாட்டுங் கை குற்றமும் அன்னியரை - உமைச்
சார்ந்தவை பொய்யுடன் சூதுவகை
நாட்டினி லெத்தனை பூக்களுண்டு - வரும்
நல்ல மணம்பல வண்ணம் வேறு
கோட்டினின் எல்லையைத் தாண்டவில்லை -நாமும்
குற்றம் கொடுமைகள் செய்வதில்லை
ஆட்டிச் சுழலிடும் பூமியிலே - எங்கள்
ஆயுள் குறையினும் பூமலர்வில்
கூட்டிகொடுப்பது இன்பம்மொன்றே - எங்கள்
கொள்கை மேன்மை இதைக் கேள்மனிதா!
ஏன் மனதே தொலைந்தாய்
மாமரத்தில் துங்கும்கனி மஞ்சள் வெயில் மாலையிருள்
மல்லிகையைத் தொட்ட தென்றல் மாறிவிடாதோ
கா மலர்ந்த பூவைவிட்டுக் காற்றினித்த கனியணைந்து
காணும் மணம்காட்டிடையே காவிவராதோ
தேமதுரக் கூட்டில்நிறை தேன் வழிந்தே ஊற்றுதெனத்
திங்கள் ஒளி காட்டுங் கவி தேனழையாதோ
பூமதுவைத் தேடு தும்பி புன்னகைக்கும் பூவைவிட்டு
போம்பழத்தி னூடுதுளை போடுதலேனோ
நானழுதும் நடைபழக நாடு ஒருதேசமில்லை
நாலனிலமே காடுஎனில் நலிந்திடும் தூக்கம்
கூனெழுமோர் விழி புருவங் கொண்டு கணை எய்பவளை
கொல்ல வருஞ்சேதி கண்டு கூடுது ஏக்கம்
கோனெழுந்து நடைபயிலக் கோடிஉயிர் போகுமெனில்
கொள்ளுவதென் நீதிதனும் கொண்டதோ தூக்கம்
வானெழுந்த மேகமென வாழ்வில்பெருஞ் சுதந்திரத்தை
வந்துவிதி மாற்றும்வரை வார்த்தையில் தேக்கம்
பாவெழுதிப் பாடும்வரி பாரில் ஒருமாற்றமில்லை
பாவம் வளர்ந் தோங்க மனம் பட்டது தாக்கம்
தீவிழியில் தோன்றும் வகை தினகரனினொளி குறைந்து
தேகமதை தீய்க்கும் சுடர் தெரியுது ஏற்றம்
ஓவெளியில் கால்நடந்து உற்றவழி காணும்வரை
உள்ளமதில் தேன்கனிந்து ஊற்றிடும் வாழ்வும்
மாவிலங்கு தானொடிந்து மங்கைமனம் தான்குளிர்ந்து
மானமுடன் வாழும்வரை மறைநிலா மேகம்
மல்லிகையைத் தொட்ட தென்றல் மாறிவிடாதோ
கா மலர்ந்த பூவைவிட்டுக் காற்றினித்த கனியணைந்து
காணும் மணம்காட்டிடையே காவிவராதோ
தேமதுரக் கூட்டில்நிறை தேன் வழிந்தே ஊற்றுதெனத்
திங்கள் ஒளி காட்டுங் கவி தேனழையாதோ
பூமதுவைத் தேடு தும்பி புன்னகைக்கும் பூவைவிட்டு
போம்பழத்தி னூடுதுளை போடுதலேனோ
நானழுதும் நடைபழக நாடு ஒருதேசமில்லை
நாலனிலமே காடுஎனில் நலிந்திடும் தூக்கம்
கூனெழுமோர் விழி புருவங் கொண்டு கணை எய்பவளை
கொல்ல வருஞ்சேதி கண்டு கூடுது ஏக்கம்
கோனெழுந்து நடைபயிலக் கோடிஉயிர் போகுமெனில்
கொள்ளுவதென் நீதிதனும் கொண்டதோ தூக்கம்
வானெழுந்த மேகமென வாழ்வில்பெருஞ் சுதந்திரத்தை
வந்துவிதி மாற்றும்வரை வார்த்தையில் தேக்கம்
பாவெழுதிப் பாடும்வரி பாரில் ஒருமாற்றமில்லை
பாவம் வளர்ந் தோங்க மனம் பட்டது தாக்கம்
தீவிழியில் தோன்றும் வகை தினகரனினொளி குறைந்து
தேகமதை தீய்க்கும் சுடர் தெரியுது ஏற்றம்
ஓவெளியில் கால்நடந்து உற்றவழி காணும்வரை
உள்ளமதில் தேன்கனிந்து ஊற்றிடும் வாழ்வும்
மாவிலங்கு தானொடிந்து மங்கைமனம் தான்குளிர்ந்து
மானமுடன் வாழும்வரை மறைநிலா மேகம்
சொந்தம்
உள்ளத்தை ஏன் உள்படைத்தனை சக்தி - அதில்
உள்ளதென் னெனத் தெளியவில்லையே புத்தி
அள்ளுவதென் தள்ளுவதென் அறியா - நானும்
ஆசையிற்பல் லாண்டு வாழ்ந்தனன் சொகுசா
கொள்ளென் றிவைகள் நீ கொடுத்தனை சக்தீ - நான்
கொட்டியதைக் கோர்த்தளித்திட்ட புத்தி
நள்ளிரவோ கண்மறைத்திடக் காப்பாய் - என்
நாளும் அன்பினில் புன்னகை பூத்திடுவாய்
அள்ளுவதென் தள்ளுவதென் அறியா - நானும்
ஆசையிற்பல் லாண்டு வாழ்ந்தனன் சொகுசா
கொள்ளென் றிவைகள் நீ கொடுத்தனை சக்தீ - நான்
கொட்டியதைக் கோர்த்தளித்திட்ட புத்தி
நள்ளிரவோ கண்மறைத்திடக் காப்பாய் - என்
நாளும் அன்பினில் புன்னகை பூத்திடுவாய்
சொல்லெடுத்ததை ஆக்கிவைத் திடசெய்தாய் - அதைச்
சொந்தமென்றிவன் சொல்வது மில்லை அறிவாய்
நெல் வயல் கொள்ள விதை விதைத்தவன் பின்னே - அங்கு
நின்றசை கதிர் நீபடைத்ததென் றுணர்வான்
நல்ல தென்றவை நினைவில் தந்தனை கருவாய் - அதை
நானிலமதில் நானளித்தது பொதுவாய்
இல்லை யென்றிவன் ஆவதுமோர் காலம் அப்போ
எவர் எதைக் கொளக்கூடுமோ இப்போதும்
சொந்தமென்றிவன் சொல்வது மில்லை அறிவாய்
நெல் வயல் கொள்ள விதை விதைத்தவன் பின்னே - அங்கு
நின்றசை கதிர் நீபடைத்ததென் றுணர்வான்
நல்ல தென்றவை நினைவில் தந்தனை கருவாய் - அதை
நானிலமதில் நானளித்தது பொதுவாய்
இல்லை யென்றிவன் ஆவதுமோர் காலம் அப்போ
எவர் எதைக் கொளக்கூடுமோ இப்போதும்
கற்றதென்னவை காலம் தந்திட்ட பாடம் - அதில்
கற்பனைகளும் காணும் வண்ணங்கள் பூசும்
நற்பணியென நான்நினைத்தது தமிழே - இந்த
நட்சத்(தி) ரங்களைத் தொங்கச் செய்தனன் அழகே
பற்றி மெய்யினில் தீ பரவிட ஓர் நாள் - அன்று
பற்றும் அன்பெனும் பாசம் பொய்த்திடும் போமாம்
உற்றதொன்றிலை உலகம் மறத்தல் வாழ்வே - என்
உள்ளம் கொண்டவை மறைவதில்லை வாழ்வே!
கற்பனைகளும் காணும் வண்ணங்கள் பூசும்
நற்பணியென நான்நினைத்தது தமிழே - இந்த
நட்சத்(தி) ரங்களைத் தொங்கச் செய்தனன் அழகே
பற்றி மெய்யினில் தீ பரவிட ஓர் நாள் - அன்று
பற்றும் அன்பெனும் பாசம் பொய்த்திடும் போமாம்
உற்றதொன்றிலை உலகம் மறத்தல் வாழ்வே - என்
உள்ளம் கொண்டவை மறைவதில்லை வாழ்வே!
வந்துமெய் விழும் பூச்சரங்களைக் கொண்டேன் - பக்கம்
வைத்தபின்னொரு புன்னகைகொண்டு நின்றேன்
அந்தமென்பது யாவரும் கொள்ளும் காலம்- அதில்
யாக்கை இன்பமும் கெட்டு நொந்துடல் வீழும்
வந்துமென் விதி நெய்விளக்கினை ஏற்றும் - அதில்
வைத்த மென்விரல் சுட்டதென்றுள்ளம் வேர்க்கும்
சிந்து கொண்டிசை பாடுவர் குரல் கேட்கும் - மனச்
சித்திர உணர் வெங்கிருந் ததைக் கொள்ளும்?
வைத்தபின்னொரு புன்னகைகொண்டு நின்றேன்
அந்தமென்பது யாவரும் கொள்ளும் காலம்- அதில்
யாக்கை இன்பமும் கெட்டு நொந்துடல் வீழும்
வந்துமென் விதி நெய்விளக்கினை ஏற்றும் - அதில்
வைத்த மென்விரல் சுட்டதென்றுள்ளம் வேர்க்கும்
சிந்து கொண்டிசை பாடுவர் குரல் கேட்கும் - மனச்
சித்திர உணர் வெங்கிருந் ததைக் கொள்ளும்?
கல்லெடுத்தவன் சிலைவடித்திடக் காண்போம் - நம்
கற்பனைகளும் சிறகடித்திடும் காலம்
நன்னினைவுகள் கொண்ட துள்ளமும் காணும் - விதி
நயனமென் னிமைவிரித் ததனையும் பார்க்கும்.
அல்லல் கொண்டலலை மேனி கணக்குப் பார்க்கும் - அதில்
அன்பு கண்டவர் விழி துளிகளை ஊற்றும்
இல்லையென்பது இறுதிப் பக்கம் சேரும் விதி
ஏட்டில் முற்றுமென் றிட்டொரு புள்ளி மூடும்.
கற்பனைகளும் சிறகடித்திடும் காலம்
நன்னினைவுகள் கொண்ட துள்ளமும் காணும் - விதி
நயனமென் னிமைவிரித் ததனையும் பார்க்கும்.
அல்லல் கொண்டலலை மேனி கணக்குப் பார்க்கும் - அதில்
அன்பு கண்டவர் விழி துளிகளை ஊற்றும்
இல்லையென்பது இறுதிப் பக்கம் சேரும் விதி
ஏட்டில் முற்றுமென் றிட்டொரு புள்ளி மூடும்.
Subscribe to:
Posts (Atom)