Friday, 25 September 2015
காதலா சே.. சே.. எனக்கொன்றும் தெரியாது!
**************
பசியென்றால் உணவுண்டு கொள்வர் - அதைப்
பலநூறு வகையாக்கிப் பார் என்று சொல்வர்
ருசியென்றா லிதுவென்றே மெச்சி - அதை
ரசியென்றே சுவைஆறு வகைசெய்து ஈவர்
பசிகொண்ட உணர்வொன்று கண்டால் - அதைப்
பலவந்தம் செய்தேனும் பதுக்கென்று கூறி
கசிகின்ற துயர் தன்னை தீரா - அவர்
கண்மீது நீர்பாயக் கதறென்று கொல்வர்
உயிர் கொல்லும் உணர்வொன்றும் உண்டு - அது
உன்மத்த மென்றாக்கத் தலை பித்தம் கொள்ளும்
வயிறிங்கே படும்பாடு கொஞ்சம் - இந்த
வலிமை கொள் நினவங்கே பெரும்பாடு செய்யும்
தயிருண்ணக் குடல் வேட்கை தணியும் - இத்
தவிப்புக்கு எது வேண்டும் தரும் பாதைவிட்டே
துயிலுக்கும் இயல்புக்கும் .துன்பம் - தந்தே
தொலையென்று மதிகெட்டே தெருவிலே தள்ளும்
வெயிலுக்குள் நின்றே பாருங்கள் - அதன்
வெப்பத்தில் துடிக்கின்ற சமுதாயம் ஓனறாம்
பயிலுங்கள் எனப் பாடத்தோடு - இங்கே
பத்தென்ற வயதோடு பயிலென்று கூறி
செயலுக்குள் எதுவாக்கம் காமம் - இந்த
செய்முறை கொள்ளும் நின் தேகங்கள் என்றே0
புயலுக்கு பலியாகும் தன்மை - இன்றிப்
புரிந்துள்ள அறியாமை தொலைத் திடச் செய்ய
அயலுக்கு மேல்நாட்டில் இன்றோ - எங்கும்
அவர்கொள்ளும் கல்விக்குள் காதலும் 0பாடம்,
பயிலென்று தருமெண்ணம் பாரீர் - அது
பலம்கொள்ளும் அறிவென்ப உணர்வினைத்தள்ளி
உயிருக்கு பெரும் வாழ்வு நல்கும் - கொண்ட
உடல்செய்யும் வேட்கைக்கு ஒருபாதை கிட்டும்
பயிருக்கு நீரூற்ற வேண்டும் - இந்தப்
படும்பாட்டுக் கொரு தீர்வு பார்த்தன்பு ஊற்றும்
........................................
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேனே!\
காதல் ஒழித்து மறைப்பதற்கல்ல. பேசுங்கள். தெளிவடையுங்கள்
...................................
என்றும் அருகில் நில்!
நீயிருந்தாய் என்னருகே நினைவெழுமென் கற்பனைகள் நெஞ்சிலிசை கொண்டினிமையாகவே தாயிருந்தால் காணும் சுகம் தந்தவள் நீ தந்ததனால் தானுமெழில் கொண்டொரு சொல்லாகவே போயிருந்தால் கோவில் சிலை போட்டுடைக்க மண்கலயம் போகமென்னும் மாயைகொண்ட தேகமே வாயிருந்தால் வாழ்ந்திடலாம் வாடி நின்றால் தேய்ந்திடவும் வாழ்க்கைகொண்ட மாயநிலை மாறவே சேயழுதால் தாயணைக்கும் சேர்ந்தகொடி மரமணைக்கும் சீறிவரும் மாநதியுமோடியே தூய கடல் சேர்ந்திணையும் தூக்கம்விழி கொண்டணையும் துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே தேயுங் குறைத் திங்களெனத் தோன்றிடாது வாழ்வுதனை தீயவழி மீண்டு நலம்வாழவே போயணைப்பாய் உள்ளமதில் பூத்த ஒளி பொலியுவண்ணப் பேரொளியாம் ஞானசக்தி ரூபமே கானகத்தில் காணும்மரம் காற்றடிக்க ஊதுமூங்கில் காட்டருவி கொட்டுமோசை கூட்டியே வானகத்தில் வெள்ளிசிரித் தாட மறை வெண்முகிலில். வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே மீனகத்தில் கொண்ட திரை மேவிஎழுங் காற்றினொலி மீறி எழும் ஆழியலை ஆக்கியே தானகத்தில் எம்மையெண்ணித் தந்தவுடல் கெட்டுவிட தாங்கிஎமை ஆட்கொள்ளுவாள் சோதியே |
யானை தன் பலமறியா
சக்தி தருவாள்!
எப்போது வேண்டும் எது
......................................
1.
பேசா மௌனம் கொள் - உன்
பெரிதாம் வாழ்வை இறை நோக்கும்
பேசா மௌனம் கொள் - உன்
பின்னால் ஞானத்தொளி தோன்றும்
‘பேசா மௌனம் கொள் - உன்
பிறழ்வும் முரண்வும் பலியாகும்
பேசா மௌனம் கொள் - உனைப்
புகழும் பெருமை தேடிவரும்
பேசா மௌனம் கொள் - உன்
புலமை ஆற்றல் பரந்துவிடும்
பேசா மௌனம் கொள் - உன்
பிழைகள் புரிந்தே வழிகாண்பாய்
பேசா மௌனம் கொள் - அந்தப்
பெரிதாமொளியும் உனில்சேரும்
பேசா மௌனம் கொள் - உன்
பிறவி பயனென் றறிவாய் காண்
2.
வேண்டும்போதே சொல் - விட்டால்
வினைகள் முற்றிக் கலியோங்கும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விலகும்நேர்மைவிதி சாடும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விட்டேமதியும் உறங்கும் காண்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விவரம் அறியாப் பகைகூடும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
வீணாய் பழிகள் உனதாகும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
வீழ்ச்சிக் கேதாய் மதிசோரும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விளைவோ நடைகொள் பிணமாவாய்
வேண்டும்போதே சொல் - விட்டால்
‘வீடும் தள்ளக் காடேற்கும்
3.
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சில் உதயத்தொளி் காணும்
பேசிக்கொண்டெழுவாய் - உனைப்
பார்த்தே யுலகம் துயில் நீங்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
மூச்சில் உணர்வே மொழிகூறும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சும் மேலாம் சபையேறும்
பேசிக்கொண் டெழுவாய்- உன்
பேச்சின் உண்மை வலுசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின தீரம் பகை வெல்லும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின் உண்மை அணிசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
வார்த்தை சுதந்திரப் பரிசீயும்
********************************
சாரம் :
(பேசாதிரு ஆனால் தேவைப்படும்போது பேசாமல் இருக்காதே!)
1.
பேசா மௌனம் கொள் - உன்
பெரிதாம் வாழ்வை இறை நோக்கும்
பேசா மௌனம் கொள் - உன்
பின்னால் ஞானத்தொளி தோன்றும்
‘பேசா மௌனம் கொள் - உன்
பிறழ்வும் முரண்வும் பலியாகும்
பேசா மௌனம் கொள் - உனைப்
புகழும் பெருமை தேடிவரும்
பேசா மௌனம் கொள் - உன்
புலமை ஆற்றல் பரந்துவிடும்
பேசா மௌனம் கொள் - உன்
பிழைகள் புரிந்தே வழிகாண்பாய்
பேசா மௌனம் கொள் - அந்தப்
பெரிதாமொளியும் உனில்சேரும்
பேசா மௌனம் கொள் - உன்
பிறவி பயனென் றறிவாய் காண்
2.
வேண்டும்போதே சொல் - விட்டால்
வினைகள் முற்றிக் கலியோங்கும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விலகும்நேர்மைவிதி சாடும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விட்டேமதியும் உறங்கும் காண்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விவரம் அறியாப் பகைகூடும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
வீணாய் பழிகள் உனதாகும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
வீழ்ச்சிக் கேதாய் மதிசோரும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விளைவோ நடைகொள் பிணமாவாய்
வேண்டும்போதே சொல் - விட்டால்
‘வீடும் தள்ளக் காடேற்கும்
3.
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சில் உதயத்தொளி் காணும்
பேசிக்கொண்டெழுவாய் - உனைப்
பார்த்தே யுலகம் துயில் நீங்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
மூச்சில் உணர்வே மொழிகூறும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சும் மேலாம் சபையேறும்
பேசிக்கொண் டெழுவாய்- உன்
பேச்சின் உண்மை வலுசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின தீரம் பகை வெல்லும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின் உண்மை அணிசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
வார்த்தை சுதந்திரப் பரிசீயும்
********************************
சாரம் :
(பேசாதிரு ஆனால் தேவைப்படும்போது பேசாமல் இருக்காதே!)
Thursday, 24 September 2015
நம்பிக்கை கொள் நலமாகும்
(வலைப்பதிவர் திருவிழா மற்றும் தமிழ் மினிலக்கிய கவிதைபோட்டி 2015 க்காக எழுதப்பட்டது)
விண்ணெழுந்த புள்ளினங்கள் வானெழுந்து தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள் மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும் மாலை யொன்றில் கூடும்
தண்ணலைகள் நிம்மதியைத் தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத் தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங் குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள் அன்னை சக்திதானும்
வெண்ணொளிக் கதிர்சிறந்து வானமேறக் காணும்
வீழ்ந்த சின்னத் தூறலை விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன் விம்பம்கொண்டதென்கும்
பெண் குழைந்து பேச நெஞ்சம் பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட ஆனந்த வாழ்வேங்கும்
கண்ணில்காணும் காட்சிகொண்ட காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக் காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம் ஏணி வைத்தேஏறும்
தண்ணலைத் தடாகத் தூடு தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம் புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி அன்னைவேண்டு ஆகும்
இது எனது சொந்தப்படைப்பாகும். இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது.இது வேறு எந்த இடத்திலும் வெளியிடப்ப்டமாட்டாது என்ற உறுதிமொழிகளை வழங்குகிறே]ன்
---- கிரிகாசன்.
விண்ணெழுந்த புள்ளினங்கள் வானெழுந்து தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள் மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும் மாலை யொன்றில் கூடும்
தண்ணலைகள் நிம்மதியைத் தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத் தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங் குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள் அன்னை சக்திதானும்
வெண்ணொளிக் கதிர்சிறந்து வானமேறக் காணும்
வீழ்ந்த சின்னத் தூறலை விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன் விம்பம்கொண்டதென்கும்
பெண் குழைந்து பேச நெஞ்சம் பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட ஆனந்த வாழ்வேங்கும்
கண்ணில்காணும் காட்சிகொண்ட காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக் காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம் ஏணி வைத்தேஏறும்
தண்ணலைத் தடாகத் தூடு தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம் புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி அன்னைவேண்டு ஆகும்
இது எனது சொந்தப்படைப்பாகும். இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது.இது வேறு எந்த இடத்திலும் வெளியிடப்ப்டமாட்டாது என்ற உறுதிமொழிகளை வழங்குகிறே]ன்
---- கிரிகாசன்.
Subscribe to:
Posts (Atom)