Friday, 25 September 2015

'எண்ணங்களே வாழ்க்கை

எண்ணங்களே நம்வாழ்க்கை - அட
. இதிலெது ரகசியமில்லை
எண்ணங்கள் கற்பனையாகும் - ஆம்
. இதிலொரு புதுமையுமில்லை
எண்ணங்கள் மழை நீர்க்குமிழி - அதன்
. எதுவரை நிலைகொளக் காணும்
மண்ணிடை விழித்திடக் கனவும் - விழி
. மூடிடக் கற்பனை முடியும்

தண்ணொளி வீசிடும் நிலவு - இத்
. தாரகை பொறித்த ஆகாயம்
விண்ணெழில் கீழ்த்திசைப் பரிதி - இருள்
. விடிந்ததும் பூக்கின்ற மலர்கள்
கண்ணெழிற் கற்பனை வாழ்வு - அது
. கசந்திடப் போம்சுடுகாடு
வண்ணக் குழைமொழி வனிதை - இவை
. வாழ்வினில் கற்பனை விம்பம்

எண்ணங்கள் பெருகிடுமிரவு - எமை
. ஏற்றி மயக்கிடும் இமயம்
வெண்பனி மறை மலை தோற்றம் அதில்
விழுந்திடும் கதிர் வரை வெண்மை
வண்ண மெழும் வான் ஒளித்தீ - அது
. வந்து கொளுத்திடும் பூந்திரி
உண்ண உருப்படும் மேனி - அதில்
. உணர்வெரி தணிவெனும் இன்பம்

எண்ணங்கள் விண்வழி பிறவி - அவை
. இருந்தெமை இயக்கிடும்கருவி
அண்ணளவில் பகல் இரவு - இவை
. அமைப்பது ஊறவெனும் புணர்வு
மண்ணிடை எதிர் மறை கவர்ச்சி - இவை
. மனதினில் சுகமெழ விரவி
கண்ணதில் மயங்கிட உருகி - மனக்
. காட்சியின் சூனிய வாழ்வாம்

'வந்த பாதையில் கற்ற பாடங்கள் .

(சந்தவசந்தக் கவியரங்குக்காக எழுதியது)
.
.
பாடுங் குயிலும் பேசும்கிளியும்
.  பாடம் கற்றதில்லை
ஆடும் மயிலும் நடனம் எங்கும்
.  அறிந்தே உற்றதில்லை
கூடும் அலைகள் விரிந்தே ஓடும்
.  கொண்டோர் செல்வரிசை
ஏடும் தூக்கும் இயல்பாய் குருவின்
. இடத்தில் கற்றதில்லை

சூடும் பூவை தென்றல்தொட்டே
.  சிறக்கும் கற்றதில்லை
ஒடும் காற்றின் உரசும் நளினம்
.  உலகிற் படித்ததில்லை
மாடும் கன்றை அம்மாஎன்கும்
.  மனதில் பண்புதனை
தேடும் கல்விஎன்றே கற்றுத்
.  தேர்வும் எழுதவில்லை

பாடும் பட்டலை மாந்தர் அறிவெழப்
.  பள்ளி சென்றிடினும்                  
நாடும் குருவுடை  நல்லோர் சிந்தனை
.  நலனைத் தந்திடினும்
காடும் மலையும் கொண்டோர் பூமி
.  கொள்கையில் வாழுபவர்
ஊடும் இதனில் உள்ளோர் அனுபவம்
.  உண்மைப் பாடங்களாம்

நாடும் மனமும் நலிந்ததே போம்பின்
.  நாமதில் கற்கின்றோம்
கூடுமுறவுகள் கொள்கை பிரித்தார்
.  குற்றம் கற்கின்றோம்
சாடும் பொழுதினில் பொய்களில் ஊறிச்
. சற்றே மதி கொண்டோம்
வாடும் மனதில் சுதந்திரம் அற்றோர்
.  வறுமை கற்கின்றோம்

ஒற்றுமையின்றி ஒரினமேன்மை
.  எழுவதில்லை படித்தோம்
கற்றவர் கூடி கனவுகள் கண்டோம்
.  காரியம் செயல் மறந்தோம்
சொற்களைப் பூட்டி சுயநலம் கொண்டோம்
.  சுற்றிடு முலகினிலே
வெற்றென வாழ்ந்தோம் விடுதலை விட்டே
.  செத்திடக் கற்கின்றோம்'

********************

சோதியை தொழுவோம்

.
சக்தியென்று சித்தம் கொள்ளு ரத்தம் சுட்டுமுன்
சஞ்சலங்கள் போனதென்று புத்தி கூத்திடும்
பக்திஎன்று வாழும் போது பார்த்து வானெழும்
பார்வைகொள்ளா சோதி எண்ணிப் பக்குவம்பெறு
எக்கதிக்கும் ஆழ்ந்திடா தோர் துன்பமேயிலா
இப்பெருத்த பாரில்வாழ்வும் இன்னல்களற்ற
முக்தி வேண்டி கையெடுத்து மேலை வானிலே
மூண்டெழுந்த ஆதிசக்தி முன் பணிந்திடு

வெட்டி நீக்கு கேடு கொள் விரோதஎண்ணங்கள்
விட்டு நீங்குமச் சுகத்தை வேண்டிக் கேட்டிடு
தட்டிக் கைகள் போடு தாளம் சல்சல்லென்றிட
தாவி ஓடும் நீரின் துள்ளல் போல வாழ்வென
முட்டி ஓடவைக்கும் கெட்ட மூர்க்கம் கொள்ளெண்ணம்
மேன்மை வாழ்வில் நீக்கவும் மனம் களிப்புறும்
வட்டியோடு வந்தகாசு விட்டுச் சென்றிடும்
வந்தே அன்னை தந்தவாழ்வு மொட்டவிழ்ந்திடும்

சுட்டுச் சாம்பலாகும் மேனி தூய்மை கொள்ளவும்
சுந்தரப் பொன் வானின் வீச்சொளிக்குள் ஆகவும்
எட்டிப் பாயும் காட்டுவாழ்விலங்கின் கொள்மனம்
இன்றிப் பூ வதன் இதழ்கள் போல் விளங்கவும்
கட்டி மஞ்சள் பூசம் மேனி காமுகர்களால்
கட்டியாள நெஞ்சும்கூசிக் கண்டிருப்பதும்
தட்டிக்கேட்க விட்டிவைகள் நீயெழுந்திடு
தர்மம்காணத் தீரம் வேண்டித் தீயைக் கேட்டெழு

மட்டியோடு மாமடையன் மற்றும்தன்மதி
மட்டமான வன் மங்கை யர்மீது வன்மமும்
இட்டு வாழ்பவன் இரக்க சிந்தையற்றவன்
ஏற்ற வேடமிட்டு இந்த மண்ணில் வாழ்பவன்
சுட்டிநின் விரலைத் தூக்கி சொல்லியே இவர்
சூழ வாழும் தேசத்தோரின் சித்தம் நல்விதப்
பட்டு வாழ்வெனும் தமிழர் வீரம் கொண்டிடப்
பரந்த வானெழுந்த சோதி பக்கம் நின்றுகொள்
*****************

விழித்ததேன்

கண்களே ஏனோ விழித்தீர் - அதன்
. காரணம் ஏது சொல்வீரோ!
மண்ணிடைகாண் அவலங்கள் - அதை
. மாற்றவெனத் திறந்தாயோ
எண்ணப் புரவிகள் பூட்டி - இசைச்
. சந்தமெழும் ரதமோட்டி
விண்ணிற் பறந்திடும் மனமே - இன்று
. விட்டு விழிகொண்டதென்ன

கண்ணிமைக்கக் கருவாகும் - பலர்
. கண்டுகொள்ள ஒளிகூடும்
புண்ணியம் ஏதென அறியேன் - அதில்
. புன்னகை கொண்டுமே நின்றேன்
திண்ணமெது புரியாது - திட
. முண்டோ அதைக் கருதாது
கண்ணிமைத்தால் ஒருகாட்சி,- அங்கு
. கற்பனையில் ஒளிவெள்ளம்

எண்ணமே வாழ்வை இயக்கும் - அது
. எத்திசை என்றிலை ஓடும்
உண்மைகள் தூங்கிடும் இரவில் - அதில்
. உள்ளதென்ன எல்லை காணும்
கண்ணியம் மேவிடக் காத்தல் -` வழி
. காணும் விநோதங்க்ள் யாவும்
வெண்ணிலவை யொத்த தண்மை - கொண்டு
. வெல்லும் விழியொளி கூடும்

தன்னிலை விட்டுமே காணும் - விழி
. தானுறங்கும் நினைவென்றும்
கண்களை மூடுவ தில்லை - அவை
. காட்சி கொண்டே கனவாக்கும்
பெண்கள் இசைத்திட நடமும் - அவர்
. பேச்சிலெழுந்திடும் மனமும்
மண்ணில் இன்பம் பெறும் ஆயின் - இது
. மாபெரும் மேன்நிலை கொள்ளும்

இன்பமொன்றே எழுந்தாடும் - அதில்
. இல்லைத் துயரென்றும் ஆகும்
பன்நிறை மாவளம் கூடும் - உன்
. பங்கெனச் சொர்க்கமும் காணும்
இன்னும் பலப்பல சொன்னார் - இவன்
. இங்குணரும் வகையென்ன
தன்னிலையில் பலவீனம் - அச்சம்
.தாரும் குழப்பங்கள் மிச்சம்

பக்கம் வாராயோ !


துடிக்கின்றேன் துன்பத்தில் தூயவளென் றெண்ணித்
தொலை நின்றும் காணாதேனோ
வடிக்கின்றேன் கண்ணீரை வாயுவர்க்கக் கன்னத்தே
வழிகின்ற நீரோடையோ
படிக்கின்றேன் பாவநூல் பச்சையுடல்நொந்துமே
பரிதவிக்க விட்டும் நீரில்
செடிக்கன்றாய்  சீராகச் செய்வளங்கள் குன்றிடச்
சிதையவும்நீ சிரிப்பதோ

இடிக்கின்றேன் ஆலயத்தை என்மனதில் கொண்ட
இறைவாசல் கதவைப் பூட்டி
பிடிக்கின்ற துயரோடு பெருமிடர்ப் பேய்வந்தே
பிணக்கென்று எனைக் கொள்ளுங்கால்
வெடிக்கின்ற நட்சத்திர வீறோடு விண்பரந்து
விளைசக்தி உன்செயலின்றி
முடிகின்ற தோஉடலும் மோகவுணர் விச்சைதனை
முழுதென்றே உன்னைநாடி

கடிகின்றேன் கைவிரலைத் தோன்றும் வலிதுயர்தானும்
தோற்றுவதென் செயாலாலிதே
குடிக்கின்றேன் போதையுடன் கூந்தல்மலர் கொள்ளிவளென்
குலமகளின் உடல்ஊற்றையே
வடிக்கின்றேன் குருதி சுட்டே வழிகின்ற காயமதில்
வந்தவிதம் அறியாமலே
பிடிகின்றேன் பிடிவாதம் போகும்வழி பிழையென்று
பேதைமனம் பறை சாற்றவே

கடக்கின்றேன் காற்றுவழி கதிரோடு ககனத்தே
காணும்வெளி கன தூரமே
அடக்கின்றேன் இச்சைவழி அத்தனையும்மேனியதில்
அதிர்வெழும் நல்லின்பங்கள் தாம்
முடகின்ற மெய்காணும் மோகவுணர் வின்றாகி
முழுதாக பொறிகொள்ளவே
படக் கண்டும் துன்பமெலாம் பனிமலர்விட்டேகுமப்
பரிதியெனப் பக்கம் வீசாய்

சுடக் கண்டும் நிற்கின்றேன் சூரியனின் வெங்கதிரும்
சூழயிருள் மூடுங்காலை
இடக்கொன்று வருமாயின் இல்லையென்றாக்குமென்
இறையவளே என்னைக் காவாயோ
கிடக்கின்றதோ வழியும் கேள்தாயைக் கேட்டால்
கூனுமிந்த கேவலம் நீங்கி
விடக்கையைப் பொத்தென்று வீழாதெமைக் காவாய்
வேண்டும்நீ வந்தே காப்பாய்

*******************

விசித்திரம்

'விசித்திரம்

சித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச் 
.  சுற்றி யிழுக்குதய்யா - அது
வித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை 
.  வேளை யறியேனப்பா 
புத்துணர்வுதரும் பொன்னளி வந்ததெந்தன் 
.  புத்தியில் சேருதய்யா - இது
சத்துவம் தந்தெனைப் பற்றியதா அது 
.  சாதகமானதுவா
  
மொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல் 
.  மின்னொளித் தோற்றங்களா - அவை
நித்திய தூக்கக் கனவுகளா முன்னே 
.  நிற்பது பொய்மைகளா
ரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில் 
   இட்டமது வொத்ததா - அவை
புத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும் 
.  போதை மயக்கங்களா
    
வற்றியகுளத்தை வந்து மினுக்கிடும் 
.  விம்பமென் கானல்களா -அன்றி
எற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய 
. இன்பச்சுனை புனலா
தொற்றிய நோயின் சுவடுகளா இத்
.  தோற்றமும் மாயைகளா  - ஏதும்
அற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின் 
.  ஆசையென் மாயைகளா

மற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில் 
.  மாலையில் பாடுங்குயில் - அது
அற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்
.  கத்திடக் காணும்ஒலி
முற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை 
.  மண்ணில் சரிந்திருக்க - எங்கும்
பற்றிய பச்சை நிறம் பரந்து எழில்
.  பாங்கினில் சோபைகொள்ள

உற்றவன் நானென ஓடிவருந் திங்கள்  
.  ஓங்குமலையொளிக்க - அதன்
பொற்தளிர் மென்னொளி பொல்லாதிருளோட்ட 
.  போதையை பாரெழுப்ப
சொற்குவை கொண்டனன் சுந்தரமாய்க்கவி 
.  சொல்ல ரசித்திருக்க
அற்புதமென்ன அறியாமையி லிவன் 
 ..ஆட மனம் மயங்க 

*******************************'



சித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச்
. சுற்றி யிழுக்குதய்யா - அது
வித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை
. வேளை யறியேனப்பா
புத்துணர்வுதரும் பொன்னளி வந்தெந்தன் 
. புத்தியில் சேருதய்யா - இது
சத்துவம் தந்தெனைப் பற்றியதா அது
. சாதகமானதுவா

மொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல்
. மின்னொளித் தோற்றங்களா - அவை
நித்திய தூக்கக் கனவுகளா முன்னே
. நிற்பது பொய்மைகளா
ரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில்
இட்டமது வொத்ததா - அவை
புத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும்
. போதை மயக்கங்களா

வற்றியகுளத்தை வந்து மினுக்கிடும்
. விம்பமென் கானல்களா -அன்றி
எற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய
. இன்பச்சுனை புனலா
தொற்றிய நோயின் சுவடுகளா இத்
. தோற்றமும் மாயைகளா - ஏதும்
அற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின்
. ஆசையென் மாயைகளா

மற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில்
. மாலையில் பாடுங்குயில் - அது
அற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்
. கத்திடக் காணும்ஒலி
முற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை
. மண்ணில் சரிந்திருக்க - எங்கும்
பற்றிய பச்சை நிறம் பரந்து எழில்
. பாங்கினில் சோபைகொள்ள

உற்றவன் நானென ஓடிவருந் திங்கள்
. ஓங்குமலையொளிக்க - அதன்
பொற்தளிர் மென்னொளி பொல்லாதிருளோட்ட
. போதையை பாரெழுப்ப
சொற்குவை கொண்டனன் சுந்தரமாய்க்கவி
. சொல்ல ரசித்திருக்க -கொள்ளும்
அற்புதமென்ன அறியாமையி லிவன்
..ஆட மனம் மயங்க


*

******************************

கனவுகளோ நினைவுகளோ

'கனவுகளோ நினைவுகளோ

*******************************
கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று
காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ
பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு
பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ
வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி 
வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ
தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே
தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ

மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மீனுங்கொண்டு மேலெழும்நீர் மேவுமலை ஆழியிலே
மெல்லக் கரைவிட்ட கயல் துடிப்பது போலே
நானுமுண்டு வாழவென்று நானிலத்தில் கேட்டழவும்
நாலும் புரியாதநிலை நிறுத்துவதேனோ 

சேனைகொண்டு  அரசபடை செல்லும்வழி காவல்கொள்ளா
சீரழிகும் செய்கை அறம் சேர்ந்திடப்போமோ
பானை மொண்டு நீர்சுமந்தே பாதிவழி பார்த்துவந்தும்
பற்றியகை விட்டிடறிப் போட்டுடைப்பேனோ
ஆனையுடன் வேங்கை நரி அத்தனையும் கானகத்தில்
ஆகும் இவையாளும் மனம்  எடுத்திடலாமோ
பூனயும்தான் காணுமெலி போட்டலைத்துச் சீண்டிவிடும்
போலமனம் தூண்டும்வகை புலப்படலேனோ

தேவி உனைக் கைதொழுதேன் தீ ஒளிரும் தாய்மனமே
தேகம் மனம் கொள்ளுரமும் தந்திடு வாயே
மேவி  வரும் துன்பமெனை மீண்டும் மீண்டும் பற்றுவதால்
மேனி படும் இன்னல்களை நீக்கிடுவாயே
காவி மனத் துன்பங்களைக் காலமெலாம் கண்டுலைந்தேன்
காதல்கொண்ட வாழ்வினிமை கண்டிடுமாமோ
ஓவியமும் நீவரைந்தாய் உள்ளஉயிர் நீகொடுத்தாய்
ஓடிவருந் தென்றல் சுகம் உளமெடுக்காதோ'


*******************************
கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று
காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ
பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு
பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ
வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி
வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ
தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே
தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ

மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மீனுங்கொண்டு மேலெழும்நீர் மேவுமலை ஆழியிலே
மெல்லக் கரைவிட்ட கயல் துடிப்பது போலே
நானுமுண்டு வாழவென்று நானிலத்தில் கேட்டழவும்
நாலும் புரியாதநிலை நிறுத்துவதேனோ

சேனைகொண்டு அரசபடை செல்லும்வழி காவல்கொள்ளா
சீரழிகும் செய்கை அறம் சேர்ந்திடப்போமோ
பானை மொண்டு நீர்சுமந்தே பாதிவழி பார்த்துவந்தும்
பற்றியகை விட்டிடறிப் போட்டுடைப்பேனோ
ஆனையுடன் வேங்கை நரி அத்தனையும் கானகத்தில்
ஆகும் இவையாளும் மனம் எடுத்திடலாமோ
பூனயும்தான் காணுமெலி போட்டலைத்துச் சீண்டிவிடும்
போலமனம் தூண்டும்வகை புலப்படலேனோ

தேவி உனைக் கைதொழுதேன் தீ ஒளிரும் தாய்மனமே
தேகம் மனம் கொள்ளுரமும் தந்திடு வாயே
மேவி வரும் துன்பமெனை மீண்டும் மீண்டும் பற்றுவதால்
மேனி படும் இன்னல்களை நீக்கிடுவாயே
காவி மனத் துன்பங்களைக் காலமெலாம் கண்டுலைந்தேன்
காதல்கொண்ட வாழ்வினிமை கண்டிடுமாமோ
ஓவியமும் நீவரைந்தாய் உள்ளஉயிர் நீகொடுத்தாய்
ஓடிவருந் தென்றல் சுகம் உளமெடுக்காதோ