Tuesday 13 October 2015

காலம் வராதோ?

பொட்டுவைத்தாள் தீஎழவும் 
. புன்னகைத்தே சுட்டுவிடப்
பட்டெரியும் வீறுடனோர் 
. பாங்கு மமைத்தாள்
ஒட்டவைத்தாள் ஓருயிரை
. உள்மனதில் அன்பை இட்டாள்
கட்டி வைத்தால் காலிரண்டை
. காதல் என்றிட்டாள்
.
தொட்டுவிட்டால் தோலுணர்வில்
. சொர்க்கம் என்றே இன்பமிட்டாள்
தோளில் ஒரு மாலை யானை
. போடவும் வைத்தாள்
கட்டில் அர சேறவைத்தாள்
. கற்பனையில் மோகமிட்டே
காற்றுடனே பார்த்திருக்கக்
. கரைந்திடச் செய்தாள்
மொட்டு இதழை கட்டவிழ்த்தாள்
. முன்மதுவை இட்டுவைத்தாள்
மெட்டிசைக்கும் வண்டினத்தை
. தொட்டுண்ண விட்டாள்
திட்டமிட்டாள் தேடி வந்தே
. தேவைஎனும் போதினிலே
தட்டுமிட்டாள் தட்டில்பணி
. தக்கது மிட்டாள்
மட்டுமட்டாய் வாழ்வினிலே
. மாறி அந்தம் ஆகையிலே
கொட்டிவைத்தாள் சக்தி எனும்
. கொள்கையைக் கூட்டி
விட்டமதைக் கூடச் செய்தாள்
. விரிவானின் எல்லையின்றி
வட்டமென வான் வளையும்
. அற்புதம் செய்தாள்
கெட்டுவிடச் செய்வதென்ன
கீழ்குடிகள் காவல்கொள்வோம்
கட்டவிழ்த்துக் கண்துலங்கச்
, காணவை என்றால்
முட்டவிழி மலர வைத்தாள்
.. முன்னிருந்து ஆக்குவித்தாள்
மூவுலகும் தோற்றமெழக்
முன்னி றுத்தினாள்
வட்டமெனச் சுற்றுமந்த
. வான்வெளியின்கோளங்களை
விட்ட வழிசென்றெழிலைக்
. விழி கொள்ளுவேனோ
அட்ட திக்கும் சென்றவளின்
. ஆற்றலுடன் நானிணைந்து
ஆன இருள் தான் விரட்டும்
. காலம் வராதோ
**************

No comments:

Post a Comment