Friday 25 September 2015

விசித்திரம்

'விசித்திரம்

சித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச் 
.  சுற்றி யிழுக்குதய்யா - அது
வித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை 
.  வேளை யறியேனப்பா 
புத்துணர்வுதரும் பொன்னளி வந்ததெந்தன் 
.  புத்தியில் சேருதய்யா - இது
சத்துவம் தந்தெனைப் பற்றியதா அது 
.  சாதகமானதுவா
  
மொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல் 
.  மின்னொளித் தோற்றங்களா - அவை
நித்திய தூக்கக் கனவுகளா முன்னே 
.  நிற்பது பொய்மைகளா
ரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில் 
   இட்டமது வொத்ததா - அவை
புத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும் 
.  போதை மயக்கங்களா
    
வற்றியகுளத்தை வந்து மினுக்கிடும் 
.  விம்பமென் கானல்களா -அன்றி
எற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய 
. இன்பச்சுனை புனலா
தொற்றிய நோயின் சுவடுகளா இத்
.  தோற்றமும் மாயைகளா  - ஏதும்
அற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின் 
.  ஆசையென் மாயைகளா

மற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில் 
.  மாலையில் பாடுங்குயில் - அது
அற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்
.  கத்திடக் காணும்ஒலி
முற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை 
.  மண்ணில் சரிந்திருக்க - எங்கும்
பற்றிய பச்சை நிறம் பரந்து எழில்
.  பாங்கினில் சோபைகொள்ள

உற்றவன் நானென ஓடிவருந் திங்கள்  
.  ஓங்குமலையொளிக்க - அதன்
பொற்தளிர் மென்னொளி பொல்லாதிருளோட்ட 
.  போதையை பாரெழுப்ப
சொற்குவை கொண்டனன் சுந்தரமாய்க்கவி 
.  சொல்ல ரசித்திருக்க
அற்புதமென்ன அறியாமையி லிவன் 
 ..ஆட மனம் மயங்க 

*******************************'



சித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச்
. சுற்றி யிழுக்குதய்யா - அது
வித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை
. வேளை யறியேனப்பா
புத்துணர்வுதரும் பொன்னளி வந்தெந்தன் 
. புத்தியில் சேருதய்யா - இது
சத்துவம் தந்தெனைப் பற்றியதா அது
. சாதகமானதுவா

மொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல்
. மின்னொளித் தோற்றங்களா - அவை
நித்திய தூக்கக் கனவுகளா முன்னே
. நிற்பது பொய்மைகளா
ரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில்
இட்டமது வொத்ததா - அவை
புத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும்
. போதை மயக்கங்களா

வற்றியகுளத்தை வந்து மினுக்கிடும்
. விம்பமென் கானல்களா -அன்றி
எற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய
. இன்பச்சுனை புனலா
தொற்றிய நோயின் சுவடுகளா இத்
. தோற்றமும் மாயைகளா - ஏதும்
அற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின்
. ஆசையென் மாயைகளா

மற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில்
. மாலையில் பாடுங்குயில் - அது
அற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்
. கத்திடக் காணும்ஒலி
முற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை
. மண்ணில் சரிந்திருக்க - எங்கும்
பற்றிய பச்சை நிறம் பரந்து எழில்
. பாங்கினில் சோபைகொள்ள

உற்றவன் நானென ஓடிவருந் திங்கள்
. ஓங்குமலையொளிக்க - அதன்
பொற்தளிர் மென்னொளி பொல்லாதிருளோட்ட
. போதையை பாரெழுப்ப
சொற்குவை கொண்டனன் சுந்தரமாய்க்கவி
. சொல்ல ரசித்திருக்க -கொள்ளும்
அற்புதமென்ன அறியாமையி லிவன்
..ஆட மனம் மயங்க


*

******************************

No comments:

Post a Comment