Wednesday 25 November 2015

வேண்டுதல்

தன்தாளே நான்வணங்கத் தந்தவளே கூறண்டம்
சென்றாழம் காண்பேனோ சுற்றும் பூவியுருண்டு
நின்தாளம் கொண்டசைய நீலக்கரு வானத்
தின்பால்கொள் சூரியன்கள் போல்நானும் ஒளிரேனோ
சிந்தை களித்திடச் செய்கவிகள் தேன்போலும்
சந்தம் கிளர்ந்தெழவும் சாற்றுவையோ நான்கேட்டு
உந்தன் குரல்மொழியாய் உருவாக்கி இங்களிக்க
செந்தமிழ்க் கவிகேட்போர் சிந்தை யுனில் திரும்பாதோ
வந்தால் ஒளி பெருகும் வையகத்தில் இருளகலும்
எந்தாழம் ஆனாலும் இதயத்துள் ஓளிசிறக்கும்
வெந்தால் எரியுமுடல் விட்டோடும் மனவிளக்கு
பந்தால் சுவரெறிந்த பாடு உன்னில் திரும்பிடுமோ
கந்தை உடைபூண்டு கடும்பிணியில் உழன்றவனை
அந்தோ அருணகிரி ஆக்கி விட மாட்டாயோ
விந்தை நோய் எனைவிட்டு வெளியேறக் காண்கிறேன்
சிந்தால்கவி படிக்கச் சொல்லெடுத்துத் தாராயோ

No comments:

Post a Comment