அன்புடை நெஞ்சங்கள் ஆவி துடித்திட
ஆக்குவன் பேரென்னவோ - பகை
வooன்புய லாய்வந்தே உள்ள உயிர் கொல்லும்
வாடிக்கை தான் திறையோ
தென்புலம் வந்துபொன் தேடிக் கொள்ளை யிட்டுத்
தேவைகள் தீர்த்திடவோ - அவர்
தென்புறத் தேனடை தீந் தமிழ் காவியத்
தென்றலாகித் தொடவோ
எண்புலி என்னிலென் ஏகாந்த சூழலில்
எண்ணக் கிடைப்பதென்ன - அவர்
கண்புகை பட்டு கலங்கலின்றி உடல்
காணும் வதைக்கென்னவோ
பண்புள்ளம் கொண்டு பழகும் தமிழ்மகன்
பார்வைகே மாளி யென்றோ - காணும்
புண்படும் உள்ளத்தில் கொண்ட புயல்தன்னும்
பூமியில் பொங்கிடுமோ
செண்பகம் ஒன்று சிறுமரத்தில் நின்று
சேதியும் கூறியதே - இந்த
மண்பகை வன்கொள்ள மாடுகளாய் உழும்
மானிடம் ஆகுமென்றே
தண்புனல் தன்னும் தருணமென்றால் ஊருட்
தாவிப் பலி எடுக்கும் - பகை
பெண்புதுமைத் தமிழ் பேரழகு சிதைத்
தின்புற ஏன்கிடந்தோம்
கட்டி விறகிட்டு தீயெரித்தால் உடல்
கையளவே கிடைக்கும் - அதை
வெட்டி உதிரத்தை வேருக் கிறைத்திட
வீரப் பயிர் முளைக்கும்
தட்டிப் பறித்தவர் தம்மைவிட்டு மண்ணை
எட்டிப் பிடித் திழுக்கும் - செயல்
திட்ட முடன் தெளிவோங்கிடச் செய்திடத்
தேவை தலைமையொன்றும்
வட்டமுரசறைந் துற்ற வெற்றிதனை
எப்போவிண் ணும் ஒலிக்கும் - நின்று
கொட்டும், தாளமெழக் கட்டழகுப் பெண்கள்
சுற்றிக் கோல் கொண்டடித்தும்
சட்ட மெழுதித்தன் எல்லையிலே கொடி
சட்சட் பட்டென் றடிக்கும் - நிலை
கொட்ட மடித்தின்பக் கும்மாளம் போட்டிடும்
கோலங்கள் காண்பதெப்போ
===================
ஆக்குவன் பேரென்னவோ - பகை
வooன்புய லாய்வந்தே உள்ள உயிர் கொல்லும்
வாடிக்கை தான் திறையோ
தென்புலம் வந்துபொன் தேடிக் கொள்ளை யிட்டுத்
தேவைகள் தீர்த்திடவோ - அவர்
தென்புறத் தேனடை தீந் தமிழ் காவியத்
தென்றலாகித் தொடவோ
எண்புலி என்னிலென் ஏகாந்த சூழலில்
எண்ணக் கிடைப்பதென்ன - அவர்
கண்புகை பட்டு கலங்கலின்றி உடல்
காணும் வதைக்கென்னவோ
பண்புள்ளம் கொண்டு பழகும் தமிழ்மகன்
பார்வைகே மாளி யென்றோ - காணும்
புண்படும் உள்ளத்தில் கொண்ட புயல்தன்னும்
பூமியில் பொங்கிடுமோ
செண்பகம் ஒன்று சிறுமரத்தில் நின்று
சேதியும் கூறியதே - இந்த
மண்பகை வன்கொள்ள மாடுகளாய் உழும்
மானிடம் ஆகுமென்றே
தண்புனல் தன்னும் தருணமென்றால் ஊருட்
தாவிப் பலி எடுக்கும் - பகை
பெண்புதுமைத் தமிழ் பேரழகு சிதைத்
தின்புற ஏன்கிடந்தோம்
கட்டி விறகிட்டு தீயெரித்தால் உடல்
கையளவே கிடைக்கும் - அதை
வெட்டி உதிரத்தை வேருக் கிறைத்திட
வீரப் பயிர் முளைக்கும்
தட்டிப் பறித்தவர் தம்மைவிட்டு மண்ணை
எட்டிப் பிடித் திழுக்கும் - செயல்
திட்ட முடன் தெளிவோங்கிடச் செய்திடத்
தேவை தலைமையொன்றும்
வட்டமுரசறைந் துற்ற வெற்றிதனை
எப்போவிண் ணும் ஒலிக்கும் - நின்று
கொட்டும், தாளமெழக் கட்டழகுப் பெண்கள்
சுற்றிக் கோல் கொண்டடித்தும்
சட்ட மெழுதித்தன் எல்லையிலே கொடி
சட்சட் பட்டென் றடிக்கும் - நிலை
கொட்ட மடித்தின்பக் கும்மாளம் போட்டிடும்
கோலங்கள் காண்பதெப்போ
===================
No comments:
Post a Comment