Sunday 5 July 2015

ஓவியப்போட்டி பகுதி 1


ஓவியத்தில் போட்டியொன்று செய்தார்
உத்தமநற் கலையினிமை காணத்
தேவியவள் சந்நதியின் முன்னே
திகழ்ந்தததைக் கண்டிடுவோம் வாரீர்
பூவிதழைப் போலும் எழில் மென்மை
பொற்கலைஞர் உள்ள மென்பதுண்மை
ஓவியர்கள் கூடி அங்குநின்றார்.
ஒளி நடந்து மேலை ’வானில் வீழ

மூன்றென் றோவியர் கலந்துகொண்டார்
முன்வருவோன் இரண்டு மூன்று நிலைகள்
சான்றுகளின் ஆக்க நிலைகாணின்
சற்றும் இவர் மேன்மை கீழென்றில்லை
தோன்றும் திறன் சமநிலையிற் காணும்
தூயகலை இறைவன் தந்ததாலே
சான்றோரும் போற்றும் இவர் பெருமை
சற்றும்குறைவற்ற எழில்தரும் கை

மண்டபத்தில் போட்டி ஆரம்பிக்க
மன்னவன் அங்கெழுந் தருளி நின்றான்
கண்டவுடன்மூன்று ஓவியர்கள்
கரம்குவித்து வணங்கிப் பக்கம் சென்றார்
பண்ணிசைத்தோர் அழகிநடம் ஆடப்
பசுங்கிளிகள் சோலையில் இசைபாட
மண்ணின்மலர் மாலைத்தென்றல் வருட
மஞ்சள் வெயில் மனதை ரம்மியமாக்க

கண்ணழகை கவரும் காட்சி தன்னைக்
கையிலெடு துச்சநிலைகாட்டும்
வண்ணங்களின் வித்தை கற்றவர்காள்
வடிவமைப்பீர் ஓவியத்தை இன்றே
மண்ணில்காணும் ஏதும் கருவாகும்
மனம்பிடித்த காட்சியொன்றை ஆக்கி
எண்ணமதை ஆளவென்று ஈவீர்
என்றவனோ மன்னன் அங்கு சொன்னான்

என்ன வண்ணம் தூரிகை கொண்டாலும்
எழுதுகையில் உண்டு விந்தை ஆற்றல்
முன்னிலைக்கு முடிவில் யார் வந்தாரோ
மிகுந்த பணப் பரிசு வென்றுசெல்வீர்
மன்னன்கூறி மூவரையும் பார்த்தான்
மனம் மனிழ்ந்து ஓவியர்கள் கூடி
தன்திறனை முற்றும் முன்னர் வைத்துத்
திரைவிரித்து வண்ணம் பூசலானார்

(பகுதி2ல் முடியும்)

No comments:

Post a Comment